குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு
முன்னிலை யாக்கல்.
மெய்தொட்டுப் பயிறல்.
பொய் பாராட்டல் (9, 10)
இடம்பெற்றுத் தழால்.
வழிபாடு மறுத்தல்.
(இ-ள்) இரந்து பின்னிற்றன் முதலாகப் பொய் பாராட்டல் ஈறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவி மறுத்தல்.
கட்டளைக் கலித்துறை
கூரும்வை வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பில்
வாருநம் மாதவி காளுங்கள் பான்மறைந் துய்ய(ச்)செய்யீர்
நீரு மசோக மடைந்துநிற் பீரும்மை நேசித்தெய்தும்
பேரு மசோக மடைந்துநின் றாலென் பிழையுமக்கே! 12