நீயே சொல்லி விட்டாய்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*சொல்லி விட்டாயே !*

படைப்பு *கவிதை ரசாகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

பெண்ணே!
நீ வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கவிதையாகி இருப்பேன்.....

நீ ரசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
சித்திரமாகி இருப்பேன்....

சுவாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
காற்றாகியிருப்பேன்....

வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
நான் கவிதையாகி இருப்பேன

நேசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கணவனாகி இருப்பேன்......

நீ வெறுக்கிறேன் என்று
சொல்லிவிட்டாயே |
நான்
'என்னாகப்போகிறேனோ....?

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*ஏன்?*

காற்றை
சிறைக்குள் அடைக்க
முயற்சித்தவர் உண்டா?

பூமியை
நில் என்று
கட்டளையிட்டு
நிறுத்த முயற்சித்தவர் உண்டா?

கடலில் கலந்த நதியை
பிரிக்க
முயற்சித்தவர் உண்டா ?

மலர்ந்த மலரை
மறுபடியும் மொட்டாக்க முயற்சித்தவர் உண்டா ?

அப்படி இருக்க......
இவர்கள் ஏன்
இதனை எல்லாம்
உண்மை காதலர்களிடம்
முயற்சிக்கின்றார்கள்?

கவிதைத ரசிகன்


💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jul-24, 8:32 pm)
Tanglish : neeye solli vittai
பார்வை : 19

மேலே