அறிவும் மனமும்
ஓர் அடர்ந்த காட்டில், மரத்தடியில்
இரு கருப்பு உருவங்கள்
ஒரு உருவம் பேசியது
"கண்ணே, காதலிக்கலாம் வா !"
மற்றொன்று மறுத்தது
"நீயோ கட்டுக்கடங்கா காட்டாறு
நானோ சலனமில்லா ஜீவ நதி ! "
"நீயோ பாய்ந்து வரும் வேங்கைப் புலி
நானோ வேலி தாண்டா வெள்ளாடு !! "
" ஒருபோதும் நாம் கருத்தொரும்மிக்க இயலாது !!!"
அறிவும் மனமுமாகிய அவ்விரு உருவங்களும்
அவ்விடத்திலிருந்து மறைந்தன !!