என் சம்பாத்தியமே

கண் விழிகள் அடியில்
கருப்பு வளையம்..
உதிரும் பூமாலைபோல்
வளையும் முதுக்த்தண்டு
கால்களின் வீக்கம்
கண் எரிச்சல்....
மூளை நரம்புகளில்
மோதும் டென்சன்....
என் சம்பாத்தியமே...
என்னை ஏன் இப்படி
பாடாய் படுத்துகிறாய்....?
கதறும் தொழிலாளி..!

எழுதியவர் : (21-Nov-11, 1:02 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 246

மேலே