கரைதாண்டிய அலைகள்...
என் தேய்ந்து போன நாட்களில்..
இன்னும் காய்ந்து போகா
கண்ணீர் கறை நீ...
உன் கரைதாண்டிய அலைகள்...
கலைத்துப்போட்ட மிச்சம்....
உந்தன் 45 நிமிடக்கோபம்
எந்தன் நட்புக்களையும், சுற்றத்தினையும்
சுரண்டி விழுங்கிய பின்புதானோ
தீர்ந்து போனது.....
உன் அலைக்கடியில்
தொலைந்து போன நட்புக்களை இன்னும் தேடிக்கொண்டு தான் இருகிறேன் ....
இன்றும் உறக்கத்தில்
உன் அன்றைய சப்தம் கேட்டு
பதற்றத்தில் விழிக்காமல் இல்லை...
அதனால்தான் இப்பொழுதும் மவுனமாகவே
திரும்பிவருகிறேன்...
நான் உன் கரைவரும்போதேலம்
என் காலில் விழுந்து நீ கேட்க்கும்
மனிப்புகளுக்கு.