பொய் வாழ்வு

சலனங்கள் சங்கடத்தில் எழும்பி,
கலங்கிடும் மனங்களும் குழம்பி.
கசக்கிப் பிழியும் கவலைகள்.
பசப்பிப் போகும் மனிதர்கள்.
கசக்கிக் கண்கள் திறப்பதற்குள்,
களவாடிப் போகும் கூட்டங்கள்.
உணர்வுகள் இடையே சிக்கி,
உறவுகள் இடையே சிக்கல்.
வெற்றியின் பின்னால் ஓடியே,
வெற்றாகக் கழியும் நினைவுகள்.
இரசிக்க மறந்த அறிவு.
இரக்கம் இழந்த இதயம்.
பயணம் முழுதும் பயமருந்தி,
பயனிலா வழிகளில் பழகப்பொருந்தி,
பொய்யான வாழ்வினை வாழ்கிறோம்.
மெய்யான இன்பங்கள் தொலைத்துவிட்டு.

எழுதியவர் : ..........கந்தசுவாமி...... (25-Feb-12, 4:25 pm)
பார்வை : 283

மேலே