தூங்கி இருக்குமோ என் பறவைகள்....

அதிகாலை ஆயிற்று....
அனலவன் மெல்ல
தனலதை சுகமாய்....
பூமியெங்கும் போர்த்தி
இரவுக் குளிருக்கு
இரங்கல்கள் பாட.....
காலை தேநீர் வாசமது
நாசி எங்கும் ஓட.....
அன்னைகளும் கன்னிகளும் ...
வாசல் தெளித்து கோலங்கள் போட....

அதிகாலை ஆயிற்று....
எங்கே போயினவோ?
ஆண்டாளின் புள்ளினங்கள்...
இரவெங்கும் அலைந்தும்
கூடு தெரியாத காரணத்தால்.....
அசதியில் ......
அதிகாலை தூங்கி இருக்குமோ
என் வானப் பறவைகள்....

எழுதியவர் : (7-Mar-12, 11:47 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 218

மேலே