என் தாய் அவள்....

இருள் நிறைந்த குடிசை வீட்டில்
இருந்து என்னை

ஒளி நிறைந்த வீட்டிற்க்கு அழைத்து வர
பத்து மாதமாக தவமாய் தவம் இருந்தவள்...

நான் அழும் போது இரத்தத்தை பாலாக மாற்றி
அமிர்தம் போன்று எனக்கு ஊட்டியவள்....

கண் சிமிட்டும் பொம்மையே போல நடித்து
என்னை வயிறு குலுங்க சிரிக்க செய்பவள்....

இரவில் நிலாவை காட்டி பாசம் என்னும் சோறு ஊட்டி

அந்த பாசத்தை கொண்டு நிலாவையே என் வீட்டிற்க்கு வரவளைத்தவள்....


நான் இரவில் தூங்க அவள் தூக்கத்தை எனக்கு கடன் கொடுத்தவள்....


நான் நடந்து பழக அவள் தன் கைகளையே காலக மாற்றி வண்டி மீது ஏற்றி சென்றவள்....


நான் தவறி விழுந்து அழும் போது கட்டி அணைத்து பாசம் என்னும் முத்த மழையே பொழிந்து

தன் மனதினால் தானும் அழுபவள்....


அவள் பள்ளிக்கு செல்ல வில்லை இருந்தும் புத்தகத்தை சுமந்தாள்

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்க்காக


அ - என்ற எழுத்தை அம்மா என்று அழைக்க உரிமை கொடுத்தவள்


அவள் தான் என் அன்பு தாய்

எழுதியவர் : ஜெறின் (7-Mar-12, 11:53 pm)
சேர்த்தது : Jerin Ross
Tanglish : en thaay aval
பார்வை : 236

மேலே