பராசக்தி

உண்ணும் போது உண்டும்
உறங்கும் போது உறங்கியும்
செய்யும் தொழில் யாவும்
சித்தம் கொண்டு செய்வதும்
எண்ணும் எண்ணம் ஏகாந்த
நிலை அடைந்து வாழ்வதும்
தெளிந்து விட்ட அறிவுடன்
முதிர்ந்த ஞானச் செறுக்கும்
இவ்வுலக வாழ்க்கையை
இனிதாக்கும் இல்லறமும்
நான் வாங்கும் வரமனைத்தும்
ஒன்றாகி உருவாகி
மழலைஎனும் மகிழ்ச்சியாய்
தந்து விட வேண்டியும்
என்போலே மகிழ்வுடனே
எனைச்சார்ந்த அனைவரையம்
அன்போடு அருள் பொழிந்து
காத்திடவும் வேண்டியே
தாழ்ந்தேன் நின்பதம் தொழுதேன்
தாயே பராசக்தியே...!!

எழுதியவர் : கலாப்ரியன் (20-Apr-12, 5:30 am)
பார்வை : 241

மேலே