கருவில் பொத்தி வைத்து..
இது வரை நான் சாப்பிட்ட
எந்த நட்சத்திர ஹோட்டலின்
சாப்பாடும் எனக்கு ருசிக்கவில்லை....
உன் கையால் நீ உருட்டி தரும்
தயிர் சாதமும், ஒரு மாவடு துண்டும்,
என் உயிரின்
ஒவ்வொரு அணுவிலும்
சுவையை கூட்டுகிறது ....
ஏனென்றால் நீ என்னை கருவில்
பொத்தி வைத்து காப்பாற்றும் தாய் அல்லவா?