நிலவு..
காதலர்களின் இரண்டாம் உலகம்..
காற்றுமண்டலத்தில் மிதக்கும் உலோகம்..
அநேக கவிஞர்களின் இரவல் முகம்..
தேய்ந்து வளரும்..என் தூரத்து காதலி..
தனிமையில் திரியும்...இரவுக் காவலன்..
கவிதையில் தெரியும் பாட்டுடைத்தலைவன்..
முழு நிலவாய் புன்னகை பூப்பாய்..
மூன்றாம் பிறையில் புன்முறுவல் புரிவாய்..
மாதமொருமுறை மேகத்தில் மறைவாய்..
என்னவளை நினைத்தாள்..
அவள் முகம் தெரிகிறது...
உன்முகம் பார்த்தாலே..
உள்ளமெல்லாம் மகிழ்கிறது..