நானும் இப்படித்தான்..

விதை-

எச்சமாய் விழுந்து
மண்ணில் புதைகையில்
முகம் சுளிக்கிறாய் நீ.

ஒரு கை நீரும் ஊற்றாமல்
மழை பொழிகையில்
வேடிக்கை பார்க்கிறாய்.

பிறகு-
விருக்ஷமென வளர்ந்து
கனிகளைச் சொரிகையில்
மட்டும்-

மார் தட்டுகிறாய்
என்னுடையதென.

எழுதியவர் : rameshalam (9-May-12, 12:08 pm)
பார்வை : 204

மேலே