இன்னுமொரு அன்னை
கவலையால் கண்கள் தவித்தது
சில நேரம் காரணத்தோடும்
சில நேரம் காரணமில்லாமலும்
கால்கள் தடுமாறி கைகள் ஆடியது
வலி சுமந்து சுமந்து
வலிமையானது இதயம் கொஞ்சம்
எல்லாம்மாறும் என்றிருந்த எனக்கு
இடையில் வந்தது மாற்றம்
வரிகளை படித்த எனக்கு
பிடித்துப்போனது வாழ்கையும்கூட...