பொய் சொல்லாதே

ஆண்,
சொல்லாதே சொல்லதே பொய்களை அள்ளிச் சொல்லதே,
செல்லாதே செல்லாதே எனை புறம் தள்ளி நீயும் செல்லாதே,
இதயத்தை நீயும் இரையாக்கினாய் "இறையில்லாமல்"
பொய்களாய் நீயும் வார்த்தைகளை மாற்றினாய்,
கனவுகளில் தினம் தோன்றி இரசிக்கின்ற இரவாக்கினாய்,
நினைவுகளால் நீயும் என் நிழலாக ஆகினாய்,
உடலுக்குள் வளரும் உயிராகினாய் ஊடுருவி என்னுள்,
பெண்,
உன்னை காணத்தான் காதலோடு காத்திருந்தேன்,
உன் உயிரில் சேரத்தான் தினம் தினம் பூத்திருந்தேன்,
உண்மையை கூறத்தான் ஊருக்குள் வீற்றிருந்தேன்,
உன் மனச்சிறையில் தான் நானும் மறைந்திருந்தேன்,
என் மதியாகத்தான் உனை மாற்றியிருந்தேன்,
ஆண்,
கண்மணியே காதலின் கடைசிக்கும் சென்றுரைக்கவா உன் செவிட்டு செவிகளுக்கு என் காதலை,
செம்மையான செந்தமிழில் செதுக்கியளிக்கவா என் காதலை உன் குருட்டு கண்களுக்கு,
அற்மே உரைக்கமாட்டாயா ஏ அழகுதடுகளே ஏன் என்னை அழவைக்கிறாய்,
பெண்,
நீ எதன் கடைசிவரைக்கும் சென்றாலும் எந்தன் கடைக்கண் பார்வையினின்று அகலாயடா,
இந்த குருடியின் கண்களில் தோன்றிவிட்டு ,குதித்து நீயும் ஆடுகிறாயடா,
உன் கண்களில் என் கன்னங்களைத் தான் காண வேண்டும் கண்ணா கண்ணீரை அல்ல,
அறம் உரைக்கிறேன் அன்பே வந்தணைத்துக்கொள் முன்பே.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:50 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 391

மேலே