(கட்டு) மானஸ்தன்
தன் வீட்டைத்
தானே கட்டும்
கட்டு'மான'ஸ்தன்..
சொந்தக் காலிலே
தங்கியாக வேண்டுமென்று
முக்காலுடம்பே பாதமா?
உன்னைச் சுற்றியுள்ள
வன்மூடிக் கவசத்தை
'மென்மூடி'யாலா சுரப்பது??
சுண்ணாம்பில் சாந்துவைக்கச்
சொல்லித் தந்ததே
நீதானே!
வலம்புரியோ, இடம்புரியோ
உன் காதில் ஓதித்தான்
மரணமே புரிகிறது
{மென்மூடி(mantle ) - நத்தையினத்தின் ஓட்டைச் சுரக்கும் அங்கம்
.*** இவ்வினத்தின் தற்சிறப்பியல்புகளில் ஒன்று - தசைச் செறிவான பாதம்.}