நதிக்கரையில் நானிருக்கிறேன்

நதிக்கரையில் நானிருக்கிறேன்,
நீரோட்டம் பெருகுமென்று நின்று பார்க்கிறேன்,
பெரும் நதிப்பரப்பில் எங்கும் நாணல்
புதர்கள் – நீரைக் காணேன்!

வைகை ஆறு வறண்டு போய்
மணல்பரப் பெங்கும் அனல்பறக்க
எங்கோ ஓர் ஓரத்தில் சிற்றோடையாய்
அழுக்கடைந்த கழிவு நீர்!

அஸ்தி கரைக்க திருப்புவனம் - அங்கே,
அழுக்கடைந்த கழிவு நீரில் கரைத்துவிட்டு,
ஆற்றுநடு செயற்கை கிணற்று
ஊற்றில் காசுதந்து நீராடி வந்தோம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-12, 8:04 pm)
பார்வை : 312

மேலே