என்னுயிரைப் பற்றி.....

தமிழ்
அது ஒரு மலர்!

கவிதையாய் கோர்க்கப்பட்டால்
மாலையாக்கலாம்!

கட்டுரையாய் பினைக்கப்பட்டால்
கதம்பமாக்கலாம்!

கதையாய் பின்னப்பட்டால்
சரமாக்கலாம்!

இல்லையெனில்
மலரென தமிழையே
இதயத்தில் சூடிக்கொள்ளலாம்!

எப்படியாயினும்
மணக்கத்தான் செய்யும்
மனம்!
தமிழெனும் (மலரின்)
நறுமணத்தால்!!

எழுதியவர் : sakthi (26-Aug-12, 2:26 am)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 139

மேலே