புத்தம் புது மலர்கள் தருவேன்!

மலர்கள் பூத்துக் குலுங்கும்
மல்லிகைச் செடிகள் சாமரம் வீசுகின்றன,
காதலன் கண்களில் உற்சாகம்,
மலர்களைக் கொய்து பைகளை
நிரப்புகிறான்;

மலர்கள் பேசுகின்றன,
காதலனே! எங்கள் அரும்புகளையும்
மொட்டுக்களையும் இன்று நீ விட்டுவிடு,
நித்த நித்தம் உன் காதலிக்கு
புத்தம் புது மலர்கள் தருவேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-12, 11:33 am)
பார்வை : 170

மேலே