நொடிப்பொழுது...
இமைக்க மறந்த
இமைப்பொழுதில்
சவமென்றார்கள்...
மூட மறந்த
மூன்றுநொடியிலும்
சவமென்றார்கள்...
சிமிட்டிய ஒரு
சில நொடியில்
உயிருள்ளதென்கிறார்கள்...
ஆராய்ந்து பார்க்க
அஞ்சாறு நொடியில்லை
இவ்வுலகமக்களுக்கு...
காற்றில் பறக்கும்
காகிதமாய் வாழ்ந்துதான்
பயனென்ன????