என்னை மன்னித்து விடு....
என்னை பெற்றவள் கூறுகிறாள்
உன்னை மறக்க வேண்டும் என்று..
என் இதயம் கூறுகிறது
உன்னை மறவேன் என்று
பத்து மாதம் சுமந்து இதுவரை என்னை காத்த
அன்னை முக்கியமா?
நான் வருவேன் என்று காத்திருக்கும்
காதலி முக்கியமா?
இந்த ஒரு நிலைமை
என் எதிரிக்கு கூட வரகூடாது
நான் எடுத்த முடிவு தவறா என்று எனக்கு தெரியாது ...
உன் நினைவை சுமந்து கொண்டு கூட வாழ்ந்துவிடுவேன் ஆனால்......
என் அன்னையை விடுத்து
என்னால் வாழ இயலாது....
என்னை மன்னித்து விடு .............