கிராமத்து இளங்காலை பொழுது

செந்நிற உருண்டை கிழக்கே மேலெழ
வீதிஎங்கும் தண்ணீர் பிடிக்கும் திருவிழா
வீதியையும் மெழுகிக்கொண்டு சாக்கடைஎனும் ஆறோடு ஐக்கியமாகி கொண்டிருக்க

அங்கங்கே பாத்திரம் தேய்க்கும் கிராமத்து குத்துவிளக்குகள்
அதனருகே துணி துவைக்கும் இளம் பெண்கள்
எதிரே அவர்கள் மனதை துளைத்தெடுக்கும் காளையர்கள்

என்னே கிராமத்து இளங்காலை பொழுது !
ஏக்கத்துடன் பார்த்து கொண்டே செல்கிறாள் நகரத்தாள்!!

எழுதியவர் : ஜெயந்தி (18-Dec-12, 12:04 pm)
பார்வை : 290

மேலே