SANKAR - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SANKAR
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Apr-2019
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  20

என் படைப்புகள்
SANKAR செய்திகள்
SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 6:01 pm

சொர்க்கம்

இல்லாதது எது
இயற்கையிலே
இதற்குமேல் ஒரு
சொர்க்கமா வானிலே
பாகற்காயும் கொடியிலே
பச்சைமிளகாயும் செடியிலே
பலாக்கனியும் மரத்திலே
பல்சுவை கண்டோம் படைப்பிலே
பன்னீர் போல் தெளித்தது சில துளிகளே
பலவகை உண்டு பாரிலே
பக்கங்களில் அடங்கா பட்டியலே
பகுத்தறிந்தால் உணர்வாய்
சொர்க்கம் உன் பாதத்திலே

சங்கர் சேதுராமன்

மேலும்

SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 5:57 pm

பாவிகள் பாதை

பெண்னே
என்னை காதலி
காதல் கடிதம்
கையில் இல்லை
மறுத்தால்
அமிலம் உள்ளது
அபிஷேகம் செய்ய
ஆயுதமும் உள்ளது
உன்
ஆருயிர் நீக்க


ஆறு வயது
அரும்பை சுற்றி
அனக்கொண்டாக்கள்
அதுவும்
அறுபதை கடந்த
அனக்கொண்டாக்களும்
அதில் அடக்கம்
அச்சம் மிகுந்த பாதை
அமேசான் வனப்பாதை

பசுமை புடவையை
சுற்றியிருக்கும்
பொள்ளாச்சி
புடவையை களையும்
துச்சாதனர்கள்
புகலிடமாய் போனது
பொள்ளாச்சி

பத்து மாதம் சுமந்தேன்
பாரம் தெரியவில்லை
அது
சுகமான பாரம்


பாவிகள் நிறைந்த
பாதையில் நீ
பயணிக்க போவதை
பார்க்க முடியாமல்
பர்வத பாரமடி என்
இதயத்தில்

சங்கர் சேதுராமன்

மேலும்

SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 1:54 pm

வாழை

பட்டையும்,இலையும்
பந்திக்கு உதவும்
பவள நிறப்பூவும்
கூட்டில் சுவைக்கும்
பச்சை நிறக்காயும்
பல்சுவையை கூட்டும்
பால் போல் தண்டும்
கல் சுமையை நீக்கும்
பழத்த நின்ற கனியும்
பசியை போக்கும்
பக்கவாட்டு நார் இழை
பல மலர்களை கோர்க்கும்
பாகமெல்லாம் பகிர்ந்தளித்த பாரியாகும்
படைத்தவன் நமக்கு அளித்த
பரிசாகும்
வம்சத்தின் வரிசைதனை
வார்த்தையில் சொல்லும்
" வாழையடி வாழை " என
வழக்கத்தில் நிற்கும்
வாசலில் வளைந்து நின்று
வாழ்த்து சொல்லும்.

சங்கர் சேதுராமன்

மேலும்

SANKAR - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 9:48 am

மனித உடல் பாதிக்கப்படின்
மனங்கலங்கும் மனிதா
புனித மரம் சிதைக்கிறாயே
புரியுமா அதன் வலி உனக்கு.

ஆற்றின் அழகு குலைத்தாய்
பூமி பிளந்து ஆழத்தோண்டினாய்
பாறையை உடைத்துத் தூளாக்கினாய்
குளிரை ஆக்கி காற்றை சிதைத்தாய்

உதவாத உடல் கொண்டு
உறுதியானவற்றை எல்லாம் அழித்து
உனக்காக மாற்றிக் கொண்டாயே
உலகம் உனக்கு மட்டுமா சொந்தம் வந்தேறியே !
--- நன்னாடன்

மேலும்

தங்கள் பார்வைக்கும் சிறப்பான வார்த்தையால் சிறந்த கருத்திட்டமைக்கு நன்றி பல கவிஞர். மலர் 1991 அவர்களே 02-May-2019 1:04 pm
தங்கள் பார்வைக்கும் அழகான கருத்திற்கும் நன்றி பல கவிஞர். பாத்திமா மலர் அவர்களே 02-May-2019 1:03 pm
சூப்பர் சூப்பர் நன்னாடன் வாழ்த்துக்கள் 02-May-2019 11:24 am
ஆறறிவு இருந்தும் இயற்கை வளங்களை அழிப்பவர்கள் காட்டுமிராண்டிகளவிட பல்லாயிரம் மடங்கு மட்டமானவர்கள். அருமையான படைப்பு கவிஞரே. 02-May-2019 8:27 am
SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 5:52 pm

என் காதல்

வண்ணம் உணர்ந்தேன்
வாசம் உணர்ந்தேன்
வண்டாக காத்திருந்தேன் வாசலில்
பூக்கதவு திறக்கவேயில்லை

சங்கர் சேதுராமன்

மேலும்

SANKAR - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2019 6:28 pm

புத்தனின் கருத்தை
பார்வையால் சொல்லி
போதித்துச் சென்றாயே என்
இதயத்துக் கள்ளி.

செக்கச் சிவந்த உன்
கன்னத்தைக் கிள்ளி
காதலால் மகிழவேண்டும்
மனதால் துள்ளி .

பவழமும் முத்தும் தன்னை
பாதுகாக்க எண்ணி உன்
பல்லாய் வாயாய்
மாறியதோ கன்னி.
--- நன்னாடன்.

மேலும்

பார்வையிட்டு அழகு சுருத்திட்ட திரு சங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல பல 11-Apr-2019 5:55 pm
புத்தன் ஆசையை தவிர்த்திருக்கலாம் புத்தன் வைத்து புனையும் ஆசையை நாம் தவிர்க்க முடியாமா? எதுகை ,மோனை வளமை சேர்த்திருக்கிறது. சங்கர் சேதுராமன் 11-Apr-2019 4:22 pm
திரு. வாசுதேவன் அய்யா அவர்களே புத்தனின் பார்வை சாந்தம் அமைதி அதைக் கருத்தில் கொண்டே, பெண்ணிடம் காதல் சொல்லும் போது அமைதியாக செல்லும் நிலையை புத்தரின் பார்வையோடு ஒப்பிட்டுள்ளேன். தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றிகள். 08-Apr-2019 5:36 pm
திரு. இளவல் அவர்களே நவரசத்தையும் கவிதையில் புனைய ஆவலில் உள்ளேன் அதனாலே பல சூழ்நிலைகளை புனைந்துள்ளேன். இருப்பினும் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்காக சில காதல் பாணியில் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றிகள். 08-Apr-2019 5:28 pm
SANKAR - SANKAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 8:28 am

முத்தும் எடுப்பேன்

கவிதை என்னும் கழனியில்
எண்ணம் ஏனும் ஏரில்
கருத்து,கற்பனை
காளைகளை பூட்டி
உழத்தொடங்கியிருக்கிறேன்
வித்தை எனும் விதை ஊனி
நன்பொருள் நாத்துவிட்டு
நற்புறமும் பிடிங்கி நட்டு
கசடுகளை களை பரித்து
கதிர் முற்றும்
காலத்திற்காக
காத்திருக்கிறேன்
சொற்கூட்டும்,பொருட்கூட்டும்
எண்ண ஓட்டங்களில் வந்தாலும்
சோதனை ஓட்டங்களாக கருதுகிறேன்
தமிழ்கடலின் கரையோரத்தில் நீந்தி கொண்டிருக்கிறேன்
ஆழ்கடலுக்கு போகச்சொல்லி
அறிவுரைக்கப்பட்டேன்
என் ஆக்கப்பணிக்கு
உங்கள் ஊக்கப்பணி
உடன் இருக்கும் போது
ஆழ்கடல் போவதென்ன
அதில் முழ்கி முத்தும் எடுப்பேன்.

சங்கர் சேதுராமன்

மேலும்

நன்றி நன்னாடன் அவர்களே 11-Apr-2019 4:10 pm
அழகாய் எண்ண ஓட்டத்தை சுவையாய் புனைந்து உள்ளீர் அருமை. எழுத்து பிழையை சரி பார்த்துப் பதிவிடவும். அதிகம் படியுங்கள் அதிகமாய் பாருங்கள் அனைத்தையும் உள்வாங்குங்கள் சரியான வார்த்தைக்கொண்டு எழுதுங்கள். 11-Apr-2019 11:42 am
SANKAR - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2019 8:56 pm

அவன்
விதைப்பது விதை
இவன்
விதைப்பது கவிதை

அவன்
படைப்பிற்கு மகசூல்
இல்லை
இவன் படைப்பிற்கு
வசூல் இல்லை

அவன்
நெல்லை அறுவடை
செய்பவன்
இவன்
சொல்லை அறுவடை
செய்பவன்

இருவருமே
அறுவடை செய்து
நல்ல விலையின்றி
வாடுபவர்கள்

அவனுக்குத் தேவை
எருது
இவனுக்குத் தேவை
விருது

அவன்
பூக்களைப் படைப்பவன்
இவன்
பாக்களைப் படைப்பவன்

அவன்
உழுதுண்டு வாழ்பவன்
இவன்
எழுதியுண்டு வாழ்பவன்

அவன்
களை எடுப்பவன்
இவன்
கலை வடிப்பவன்

அவனுக்கும்
வரிவிலக்கு இல்லை
இவனுக்கும்
வரி விலக்கு இல்லை

அவன்
தன்னைப் பேணாமையைப்
பேசுகிறான்
இவன்
தன் பேனா
மையால் பேசுகிறான்

அவன்
இந்தியாவ

மேலும்

அருமை அருமை சங்கர் சேதுராமன் 11-Apr-2019 8:14 am
SANKAR - SANKAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2019 1:59 pm

மீசை

வெள்ளிமுடிகள்
வெளிச்சம் காட்ட
களை எடுப்புகளை
கையாண்டேன்
கருமை கட்சியிலிருந்து
அனைவரும் தாவினர்
வெண்மை கட்சிக்கு
கத்தரிக்கோல் வேலையில்
களைத்து போனேன்
களை பயிர்கள்
கழனி முழுவதும்
களைகளை
கதிராக்கும்
கரு "மை" வித்தைக்கு என்
கருத்து உடன்படவில்லை
கலப்பையான கத்தி கொண்டு
களைகள் விலக்க
முனைந்த போதுதான்
கண்டுக்கொண்டேன்
கைப்பிடித்தவளுக்கு
கடுகு அளவுக்கூட
உடன்பாடு இல்லை என்று
களையெடுக்கும்
முற்படும் போதல்லாம்
கடுகு வெடிக்கும் அவள் முகத்தில்
ஆசைக்காதலுக்கு
மீசையும் ஒரு காரணமோ!!
அலுத்து விட்டாளோ
அவள் முகத்தில் கடுகு வெடிப்பதில்லை
ஆனாலும் எனக்கு இன்னும்
அச்சம்தான்
அறுவடை செய்யும் போது

சேதுராமன் சங்கர்

மேலும்

SANKAR - SANKAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2019 1:55 pm

வாடுவதற்கு முன்
வாசத்தையும்
வண்டிற்கு தேனையும்
வழங்கி விட்டு போகும்
மலர்களே
மனிதர்கள் நாங்கள்
மனமில்லை உன் போன்று
மதி ஆறு இருந்தும்.

சங்கர் சேதுராமன்

மேலும்

SANKAR - SANKAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2019 1:46 pm

பச்சிளம் பயணம்


கருவாகி
கால மாத பத்து
கணக்கில் உருவாகி
கருவறை
கதவு திறந்து
படுத்தே பயண பட்டு
பச்சிளமாய் வந்தேன்
இப்பாருக்கு

தொடர் கொடியை
துண்டித்த பின்
துக்கம் தாளவில்லை
அழுது உணர்த்தினேன்
அதுவே எனது பாஷை
அப்போது

தொட்டிலாய் ஒரு மடி
தொடர்ச்சியாய் வந்ததும்
துண்டித்த சோகம் மறந்து
பால்கொடியை 
பற்றி கொண்டு
படரத் தொடங்கினேன்

பால் உண்பதும்
படுத்துறங்குவதும் என்
பகுத்தறிவுக்கு எட்டிய
ஒரேப்பணி

பால்கண்ணம்
பலூனாக உப்பியது
படுத்து கொண்டே
பயிற்சி கை,கால் உதைத்து

பக்கவாட்டில் சாய முயன்று
பலமுறை தோல்வி
பலன் கிட்டியது ஒரு நாள்
முதன் முதலில் என்
முதுகு வான் பார்த்தது

நீரா வேண்டும்?
நிலத்தில்
நீந்தியே தூரம் கடந்தேன்.

நிமிர்ந்த தண்டுவடம்
நீந்தவதற்கு தடை விதித்தது

தண்டுவடம் நிமிர்ந்தாலும்
தடுமாற்றம் கால்களில்

கை பற்றினேன் நடைவண்டி
கால் ஓட்டத்தில்
உயர்ந்து நின்றேன் ஒரு படி.


சங்கர் சேதுராமன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே