துரைசாமி நடராசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  துரைசாமி நடராசன்
இடம்:  புன்செய்ப் புளியம்பட்டி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் மென்பொருள் வல்லுநராக சென்னையில் பணியாற்றுகிறேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக சிலவற்றைக் கிறுக்கி மகிழ்ந்துகொள்ளும் சாதாரண தமிழ் கிறுக்கன் நான்.

என் படைப்புகள்
துரைசாமி நடராசன் செய்திகள்

தவறுதான் என்ன செய்ய...
நரம்புகள் தள்ளாடும்
உணர்வுகள் கூத்தாடும்
"பொறுத்தார் பூமி ஆள்வார்..."
செல்லுபடியாகாது இங்கே...
மறைவிடம் கிட்டாது இந்த மாநகரில்...
உள்ளுக்குள் உருண்டையொன்று உருண்டோட
உந்துதலின் காரணமாய் உடைந்துபோன நான்
உட்கார்ந்தேன் அவ்விடமே
ஆம்...
"ஆத்திரத்தை அடக்கலாம்..."

மேலும்

அன்பே!
கொசு கடித்தால் அடிக்காதே
நீ அடிப்பதற்காகவே அது கடிக்கிறது...

மேலும்

துரைசாமி நடராசன் - துரைசாமி நடராசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2015 3:24 pm


சுவடுகள்...

"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...

மேலும்

நன்றி... 26-May-2015 10:03 am
நன்றி... 26-May-2015 10:03 am
நன்றி... 26-May-2015 10:02 am
அருமை புதுமை அழகு... 23-May-2015 12:16 am
துரைசாமி நடராசன் - ப்ரியன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2015 7:06 am

புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன்

கிரிக்கெட் சீரியலில்
யாவரும் மூழ்கிட
விளம்பரங்களில்
விருப்பம் உனக்கு

காலை மாலை
வைத்திருந்தாலும் ஓட
கண்டுதும் பெரியது
தாய்தான் உனக்கு

தேனும் பாலும்
கொடுக்க இருந்தும்
திண்றிட பிடிக்கும்
மண்தான் உனக்கு

பகல் முழுவதும்
விழித்து இருந்தாலும்
இரவிலும் விளையாடிட
ஏக்கம் உனக்கு

பஞ்சு மெத்தை
பட்டு இட்டாலும்
அன்னை மடியில்தான்
ஆசைகள் உனக்கு

மேலும்

நன்றி நட்பே... 25-May-2015 5:36 pm
சிறப்பு... 25-May-2015 12:55 pm
நன்றி தோழா... 25-May-2015 9:38 am
நன்று தோழா.. 25-May-2015 7:55 am

ஒரு பிணத்தின் அழுகை

கண்டவங்க கண்ணுதான் பட்டுப்போச்சோ?
காலனுக்கும் உன்ன பிடிச்சுப்போச்சோ?
இல்லை உன் காலமுந்தான் முடிஞ்சுபோச்சோ?

நீ முட்டி முட்டி குடிச்சுத் தள்ளும்
முலைப்பாலும் சொட்டுதடா
சிந்திய கண்ணீருல சிலது கலக்குதடா

மண்ணாள வந்தவனை மண்ணுக்குதான் தருவேனோ
மன்னா உன்ன தந்துபுட்டு மனுசி நானும் வாழ்வேனோ

கட்டிவச்ச தொட்டில் சேலை காத்துலதான் ஆடுதடா
கண்ணே நீ எங்கன்னு கண்ணாபின்னான்னு தேடுதடா

உம்மூத்திர வாசம் வந்து நாசியை நனைச்சுப் போக
உசுரோட வாசமும் கொஞ்சம் உறங்கித்தான் போகுதடா
(...)

மேலும்

துரைசாமி நடராசன் - துரைசாமி நடராசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2015 12:58 pm


முதிர்கன்னியின் முனகல்
-----------------------------------------
வருக்ஷம் பத்து முன்னே
வயசுக்கு வந்தேனே
வண்ணக் கனவோட
வாக்கப்பட நின்னேனே

பாத்துவச்ச மாப்பிள்ளையோ
பரலோகம் போய்விட
பாவிமக அப்படின்னு
பாத்தவங்க சொன்னாங்க

விட்டத்த வெறச்சு பாத்தே
விறகாச்சு என் உடம்பு
விலக்கி வச்ச ஊருக்குள்ள
விலை போகா சரக்காச்சு

கல்யாணம் ஆகலையே
கன்னி உடல் கசங்கலியே
கரையேறி மேலவர
கரம் யாரும் கொடுக்கலியே

முடியும் நரைச்சுப் போச்சு
முகமெல்லாம் தொங்கிப் போச்சு
முடி (...)

மேலும்

தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி நண்பா. திருத்திக்கொள்கிறேன். 22-May-2015 3:27 pm
பத்து வருடத்திற்கு முன்பு வயசுக்கு வந்தவளா - 22 வயசுக்காரியா - முதிர்கன்னி? அதற்குள்ளாகவா முடியும் நரைத்து விட்டது? .... 22-May-2015 1:47 pm


சுவடுகள்...

"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...

மேலும்

நன்றி... 26-May-2015 10:03 am
நன்றி... 26-May-2015 10:03 am
நன்றி... 26-May-2015 10:02 am
அருமை புதுமை அழகு... 23-May-2015 12:16 am
துரைசாமி நடராசன் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2011 4:32 pm

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,

வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,‘நகரத்தின் இயக்கத்திற்கும், தொழிலுக்கும் மு

மேலும்

கிளைமாக்ஸ் ஊகித்த படியே என்றாலும் தங்களின் எழுத்து ஓட்டத்தில் என்னை பறிகொடுத்தேன்.. எண்ணத்தில் வைக்க வேண்டிய எண்ணற்ற கருத்துக்களை உள்வாங்கும் படைப்பு.. அருமை அபி அய்யா. 13-Jun-2015 4:50 pm
இது போன்ற ப்உங்கள் கதைகளை பல நான் வாசிக்க தவறிவிட்டேன். . இந்த கதை நீங்கள் பதிவு செய்தப்போது நான் தளத்தில் இணையவில்லை, இருந்தாலும். இப்போது வாய்ப்பு கிடைத்தது.... கருத்து எப்படி சொல்ல .. ? கட்டுரையில் வெளிப்படுத்துகிறேன் . அபி சார். 27-May-2015 12:43 am
சலாம் ... நமோஸ்துதே... எல்லா மதங்களும் ஒன்றைதான் சொல்கின்றன... சிறுகதையில் மூடர்களின் கண்களை திறக்கிறீர்கள்... ஒரு கவிதை பிறந்தது.. //மதக்கலவரத்தில் தொலைந்து போன மனைவியை தேடி மயக்கமுற்ற மஸ்தானுக்கு சோடா வாங்கி தந்தார் மணிகண்ட பிரபு..!// உறைந்து போயிருக்கிறேன்... உங்களின் சிறுகதையில். மதங்களை கூறி சண்டையிடுபவர்களின் சட்டையை பிடித்திருக்கிறது இக் கதை.... அருமை அபி.. 24-May-2015 1:20 pm
ஒரு சிறுகதை.. ஒரு சம்பவத்தை வைத்து பெரிய சரித்திர சத்தியங்களையும் பண்புள்ள வாழ்வுமுறைகளை கற்றுத் தர மனிதனால் படைக்கப்பட்ட மதங்களால் இன்று மனிதம் அழிகின்ற அவலங்களையும் சொல்லி வாசிக்கும் இதயங்களை பிழிகிறது....நல்ல படைப்பு அபி அவர்களே... 24-May-2015 11:09 am
துரைசாமி நடராசன் - துரைசாமி நடராசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2015 6:28 pm


அப்பாக்கள்
-------------------
நாம் அழுதால் சிரிப்பு மூட்டும்
கோமாளிகளாகவும்...
சிரித்தால் ஏமாந்துபோகும்
ஏமாளிகளாகவும் இருப்பவர்கள்
அப்பாக்கள் மட்டும்தான்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே