எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தீண்டாமையையும்
சாதியையும் அகற்ற
சாஸ்திரங்களின்
உதவியை நாடுவது
சேற்றை சேற்றால்
கழுவுவது போன்றதே ஆகும்.
----புரட்சியாளர் அம்பேத்கர். (15.08.1936)
ஈசனே ஆயினும்
குற்றம் குற்றமே என்று
நேருக்கு நேர் நின்று வாதிடத்துணியும்
கலகக்காரர்களாலேதான்
இந்த உலகம் வாழ்கிறது.
----புரட்சியாளர் அம்பேத்கர்.
இதுவரை நமது நாட்டில்
செய்யப்பட்டு வந்த
சீர்திருத்தம் என்பதெல்லாம்
பாமர மக்களை
படித்தவர்களும் பணக்காரர்களும்
ஏய்ப்பதற்கு கண்டுபிடித்த
ஒரு சூழ்ச்சியே ஒழிய
உண்மை சீர்திருத்தமல்ல.
------தந்தை பெரியார், குடி அரசு 1930.
உன்னை சத்திரியன் என்றோ
வைசியன் என்றோ
நீ சொல்லிக்கொள்ளும்போது - நீ
பிராமணன் என்பவனுக்கு
கீழ்பட்டவன் என்பதை
நீயே ஒப்புகொண்டவனாகிறாய்.
------தந்தை பெரியார், குடி அரசு 1930.
எதாவது ஒரு
குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான்
கடவுள் அருளோ, மோட்சமோ கிடைக்கும்
என்கிற விடயத்தில் எனக்கு சிறிதும்
ஒப்புதலோ நம்பிக்கையோ கிடையாது.
---------தந்தை பெரியார், குடி அரசு 1930.
எந்த முறையிலாவது
புராணப் பண்டிதர்களை
பொதுமக்கள் ஆதரிப்பார்களேயானால், அது
கொள்ளியை எடுத்துத்
தலையை சொரிந்துகொள்வது போலாகும்.
-----------தந்தை பெரியார், குடி அரசு 1930.
கடவுள் ஒருவர்
உண்டு என்றுச் சொல்லிக்கொண்டு
தொட்டதற்கெல்லாம்
கடவுள்மீது பழிபோட்டுக்கொண்டு திரிபவன் மூடன்.
--------------தந்தை பெரியார், குடி அரசு 1930.
பத்துமாதத்துக் கைக்குழந்தையை
கக்கத்தில் வைத்துக்கொண்டு, சாமியைக்காட்டி
அதை கும்பிடு என்று கைக்கூப்பச் செய்வதைவிட,
இருபது வயது வாலிபனைப் பார்த்து - நீ
கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
------தந்தை பெரியார், 1930.
சுயமரியாதைக்காரர்கள்
கடவுளை ஒழிப்பதில்லை,
என்றையதினம் மனிதனுக்கு
ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ
அப்பொழுதே கடவுள் செத்துப்போய்விட்டது.
-----தந்தை பெரியார், 1930.