எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன்னம்பிக்கையின் கட்டுரை....!

வாழ்க்கையில் தொற்றவன் மீண்டும் எழுந்து வந்த கதை....!

அனாதையாக பிறந்த அந்த இளைஞன்
தன்னுடைய 25 வயதுவரை பார்க்காத துன்பங்கள் இல்லை...!

வாழ்க்கையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அந்த இளைஞன் ஒரு முடிவு எடுத்தான்...

பசி வறுமை வாழ்வாதார கொடுமை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க
முடிவெடுத்தான் அந்த இளைஞன்...

ஆம்... தற்கொலை செய்ய ஒரு பெரிய மலை உச்சிக்கு சென்றான்...

அந்த மலை உச்சியில் நின்று கொண்டு
கீழ் நோக்கி பார்த்தான் ஒரு கல் உருண்டு ஒடியது. அதை கண்டு கொலைநடுங்கி போனான்...

பிறகு சற்று கீழே அமர்ந்து இந்த உலகை இறுதியாக கண்டு ரசித்தான் அந்த இளைஞன்...

அவன் அருகில் இரு புறாக்கள் அமர்ந்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன...

அந்த இரு புறாக்களை உற்று நோக்கினால்
அந்த இரு புறாக்களின் சந்தோஷத்தை கண்டு இவன் உள்ளில் ஒரு கேள்வி எழுகிறது...

இவைகளுக்கு எல்லாம் உணவளிப்பது யார்?
5 அறிவு கொண்ட இந்த புறாக்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதே..
ஏன் ?நானும் இவைகளை போன்று இந்த உலகில் சந்தோஷமாக வாழக்கூடாது என்று முடிவெடுத்தான்....

மலை அடிவாரத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றான்...

செல்லும் வழியில் ஒரு வயதான பெரியவர் ரோட்டில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்று கேட்டான் ஐயா ஏன் நீண்ட நேரம் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டான் அந்த இளைஞன்...

அந்த பெரியவர் சொன்னார்..
நான் சாலையைக் கடந்து அங்கு உள்ள மருத்து கடைக்கு செல்ல வேண்டும்...

இளைஞன்: சரி ஐயா உங்களை நான் கூட்டி செல்கிறேன் வாருங்கள்..
கைத்தாங்கலாக கூட்டிச் சென்று மருந்தைப் பெற்றுக் கொடுத்தான் அந்த இளைஞன்...
வரும் வழியில் அந்த பெரியவரிடம் உரையாற்றி கொண்டு வருகிறான் அந்த இளைஞன்...

அந்த பெரியவரிடம் கேட்டான் ஐயா நீங்கள் ஏன் இந்த தள்ளாடும் வயதில் தனியாக வருகிறீர்கள் உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா...

பெரியவர்: சொன்னார் பிள்ளைகள் இருந்தார்கள் என் சொத்துக்களை பெறும் வரை.. என்று சிரித்த முகத்துடன் அந்த பெரியவர் சொன்னார்....

இளைஞன்: சரி ஐயா இங்கு ஒரு அரண்மனை வெளியே கூடாரம் இருக்கிறது இங்கு அமர்ந்து விட்டு செல்லுங்கள்...

பெரியவர்: நேரடியாக அந்த அரண்மனைக்குள் சென்றார்..

இளைஞன்: ஐயா இருங்கள் ஏன் அரண்மனைக்குள் செல்கிறீர்கள் காவலாளி கண்டால் திட்டுவார்கள்..

பெரியவர்: சரி தம்பி உன் வீடு எங்கே இருக்கிறது..

இளைஞன்: எனக்கு வீடு 
ஒன்றும் இல்லை ஐயா...

பெரியவர்: சரி உள்ளே வா தம்பி இது என் வீடுதான்....

இளைஞன்: ஆச்சரியத்துடன் உள்ளே சென்றான்..

அரண்மனை வாயிலில் காவலாளி கதவை திறந்து விட்டார் ஓட்டுநர்களும் வேலை ஆட்களும் ஓடோடி வந்து பெரியவரிடம் வணக்கம் சொல்வதைப் பார்த்து பூரித்து போனால் அந்த இளைஞன்....

இளைஞன்: ஐயா இத்தனை வேலை ஆட்கள் இருக்கிறார்கள் இருந்தும் நீங்கள் ஏன் மருந்து கடைக்கு நடந்து சென்று மருந்தைப் வாங்கி வருகிறீர்கள்...

பெரியவர்: சிரித்தபடி சொன்னார் நான் பெற்ற பிள்ளைகள் என் சொத்துக்காக பல முறை மருந்தில் விஷம் கலந்தும் என்னைப் கொள்ள பார்த்தனர்..
அவர்களை கொலைகாரர்களாக்க நான் விரும்ப வில்லை அதான் என் கடைசி மூக்கு கண்ணாடி வரை அவர்களிடம் கொடுத்து வழி அனுப்பி விட்டேன்...!

இளைஞன்: சரி ஐயா இவர்கள் உங்கள் வேலை ஆட்கள் தானே இவர்களிடம் வாங்கி வரச் சொல்லாமே...!

பெரியவர்: இவர்களையும் நான் கொலைகாரர்களாக்க விரும்ப வில்லை தம்பி என்று சிரித்த படியே வா தம்பி உள்ளே செல்லலாம்...!

இளைஞன்: தலையை சொரிந்து படி
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்...!

பெரியவர்:‌ ம் கேள் தம்பி..

இளைஞன்: நீங்கள் தான் உங்கள் கடைசி மூக்கு கண்ணாடி வரை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டீர்களே...
பிறகு எப்படி இந்த அரண்மனை வாழ்க்கை...!

பெரியவர்: ஆம் தம்பி அவர்கள் என்னை நடு ரோட்டில் விட்டு சென்றாலும்..
என் மன வலிமை என்னிடம் சொன்னது நான் இருக்கிறேன் என்று.... என்னுடைய
அறுபது ஆண்டுகள் கழிந்து சென்றாலும் மீண்டும் பிறந்தேழுந்தென்... மனதளவில் 25வயது வாலிபனாக...

என் வாழ்க்கையை கட்டுரையாக எழுதினேன் என் கட்டுரை 
திரைக்கதையாக மாறியது...
என் திரைக்கதை திரையில் படமாக வெளிவந்தது... என் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் எனக்கு பரிசாய் தந்தார் இந்த அரண்மனையை...!

இளைஞன்: என்ன ஐயா சொல்றீங்க வாழ்க்கையை திரைக்கதையாக ‌எழுதி
இவ்வளவு பெரிய அரண்மனையை பெற்றுள்ளீர்களா.... நம்ப முடியவில்லையே

பெரியவர்: என் திரைக்கதையை இந்த உலகிற்கு சொன்ன அந்த இயக்குனர் நிறைய அரண்மனையை பெற்ற பின்பு தான் தம்பி எனக்கு இந்த அரண்மனையை லஞ்சமாக தந்தார்... என் கதையை நான் யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக.....!

இளைஞன்: பிறகு ஏன் ஐயா என்னிடம் சொன்னீர்...!

பெரியவர்:  நீ அந்த மலை உச்சியில் இருந்து இறங்கி வந்ததை பார்தேன் தம்பி...!

இளைஞன்: குழப்பத்துடன் சரி ஐயா நான் வருகிறேன் என்றான்...!

பெரியவர்: சரி தம்பி நான் உன்னிடம் நான் ஒன்று சொல்லட்டுமா...

இளைஞன்: சொல்லுங்கள் ஐயா...

கடைசியாக அந்த பெரியவர் சொன்னார்
தம்பி என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை தொடங்கும் போது எனக்கு அறுபது வயது... என்று சொல்லி விட்டு சென்றார்.....!

அந்த பெரியவர் சொன்னதை ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞன் உட்கார்ந்து யோசித்தான்....!

பெரியவர் சொன்ன வார்த்தை அவன் மனதில் ஆழமாக பதிந்தது...

தன் பிள்ளைகள் அந்த பெரியவரை நடு வீதியில் விட்டு சென்றாலும் அவருடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி மீண்டும் அவரை அரண்மனைக்கு சொந்தக்காரர் ஆக மாற்றியது....!

நான் 25வயதில் வாழ்க்கையை இழக்க துணிந்தேனே....

என்று அவன் ஆழ் மனதில் சொல்லியபடி அவன் வாழ்க்கையின் உயர்வை தேடி சென்றான்....!

போராடினான் போராடினான் 
இந்த உலகமே உற்று நோக்கும் 
அதிபதியானன்...!

வாழ்க்கையை வெறுத்து
உயிரை மாய்த்துக்கொள்ள சென்றவனை மாற்றியது அந்த பெரியவரின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தை....!

இதில் இருந்து என்ன புரிகிறது....!

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் தளரும்பொழுது அந்தப் பெரியவரை போன்று தன்னம்பிக்கை கொடுங்கள்...!

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வருடும் பொழுது அந்த புறாக்களைப் போன்று அவர்கள் மனதை 
புத்துணர்ச்சியாக்குங்கள்....!

வாழ்க்கையின் கதைகள்....!
உருவாக்கம் உங்கள் நண்பன்....✍️ தமீம் ✍️

மேலும்

தீர்வு இல்லா நோய் வந்தாலும்..!
தீர்வு இல்லா வறுமை வந்தாலும்..!
திணறடிக்கும் பசி வந்தாலும்..!
மாறாத மதவெறி...!
மலருமா இந்தப் 
பூவுலகில் நன்னெறி..!

உணர்வுக்காக உயிரை 
இழக்கும் மனிதம்..!

அவரவர் கடவுள்கள் 
அவரவர்களுக்கு புனிதம்...!

வளையும் நாவினால் 
வலைதளத்தில் வேண்டாமே விமர்சனம்..! 

மதத்தின் பின்னால் 
சவக்கிடங்காய் சாம்பலை 
ருசிக்கும்  இவ்வுலகம்...!

மிஞ்சி இருக்கும் நாட்களை
நல்வழியில் கழித்து விடு 
இந்த உலகம் ஒரு நாடகம்....!


ஆறறிவு கொண்ட மனிதா 
தட்டி எழுப்பு உன் ஏழாம் அறிவை...!

அடித்து விரட்டு மதவெறி யின் அழிவை...!

மதவெறி மாறுவது எப்பொழுதோ..!
மன நிம்மதி‌யும் அப்பொழுதே...!

உருவாக்கம்.. தமீம்......✍️

மேலும்

வந்ததே கொரோனா
வாழ்வாதாரத்தை 
கொண்றதே கொரோனா..

ஓடி ஓடி உழைத்த சொத்தையும்
ஒழிக்க வந்த கொரோனா...

தான் என்ற எண்ணம் கொண்ட 
மனிதனை
தகர்க்க வந்த கொரோனா...

பூலோக ஆசையை 
புதைக்க வந்த கொரோனா..

மண்ணறை வாழ்க்கையை 
நினைக்க வைத்த கொரோனா..

மனிதன் ஆடிய ஆட்டத்தை 
அடக்க வந்த கொரோனா...

மதுவால் தள்ளாடியவர்களை 
தடுக்க வந்த கொரோனா...

மாதுவிடம் தகாத முறையில் 
உறவாடியவர்களை தடுக்க
வந்த  கொரோனா...

சாதியில் உறைந்தவர்களையும் 
பீதியில் உறைய வைத்த கொரோனா...

கோடியில் பிழல்பவர்களையும்
முகமூடி அணிய வைத்த கொரோனா...

உடமைகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இருந்தவர்களை.
உயிரும் 
ஒரு நாள் பறிபோகும் என்பதை 
உணர்த்த வந்த கொரோனா..

மனிதன் உயிர் பிரியும் வரை 
மண்ணறையை நினைவு கூறுவதில்லை..
மண்ணறையை நினைவாற்ற வந்த கொரோனா....

உன்னை அனுப்பியவன் சீனனா..
இல்லை இறைவனா....

மண்ணறையை சென்றடையும் முன் மனிதத்தை வென்றடையுங்கள்....!
Create by ✍️ thamim ✍️

மேலும்

காய்ந்த வயிறு...
பசியால் கதறுகிறது...!

கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் 
உண்டியலும் இங்கு நிறைகிறது....!

மூன்று வேளையில் ஒரு வேளை இல்லை என்றாலும் சிலர் சிறுமூளை சிதைகிறது.....!

மூன்று வேளையில் ஒரு வேலை கிடைக்குமா என்ற கனவோடு சிலர் வயிறோ பதறுகிறது....!

பசியை உணர்ந்த வயிறு 
ருசியை வெறுக்கிறது...!

ருசியை உணர்ந்த வயிறோ
பசியை உணர மறுக்கிறது...!

பிரசவத்தின் வலியை விட
பிரபஞ்சத்தின் பசியின் வலி 
நாள்தோறும் உயர்கிறது....!

உன் தர்மம் பிறரது பசிக்கு உணவு எனில்
உன் அதர்மம் இந்த உலகத்திலேயே  மன்னிக்கப்படுகிறது.....!

பசியை உணர்வோம்....!
பசியில்லா உலகத்தை உருவாக்குவோம்...!
Create by ✍️ thamim ✍️

மேலும்

அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்து .... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படைப்பு வாழ்த்துக்கள் தோழர் .. நம்மால் இயன்ற வரை போக்கிடுப்போம் பிறரின் பசியை .... 17-Apr-2020 9:45 am

தலைப்பு::வாய்ப்பு...!

என்னை வந்தடைய 
உனக்கு வேண்டும்
எத்தனை இரவு....!

நான் தொடுவதெல்லாம்தெல்லாம்
எனக்கு ஏற்படுத்துகின்றன சரிவு....!

வாய்ப்பே உன்னை அடைய 
ஏன் எனக்கு எட்டவில்லை அறிவு....!

உன்னை அடைந்தாலும்
ஏன் என்னிடமிருந்து
உனக்கு இந்த பிரிவு....!

நீ என்னிடம் வரப் போகிறாய் என்று தெரிந்தாலே
கூடிவரும் உறவு....!

கனவுகளோ கண்களுக்குள்ளே..!

காண்பதற்கோ எல்லைகள் இல்லை...!

வாய்ப்பே நீ மட்டும் ஏன்
என் வாழ்க்கைக்குள் வருவதில்லை....!

மன் உன்னை மறைப்பதற்குள்..!

வின் உன்னை அழைப்பதற்குள்..!

பாலூட்டி வளர்த்த உறவுகள்
உன்னை பாடையில் சுமப்பதற்குள்...!

செடிகள் உன்னை 
சூல்வதற்குள்....!

வாய்ப்பு எனும் விடியல் 
உன்னை வந்தே தீரும்...!

எதிர் நோக்கி விழித்திரு
ஒவ்ஒருநாளும்....!

💌தமீம்✍️

மேலும்

தலைப்பு:வாழ்க்கையின்.போராட்டம்

மயக்கம் கொண்ட மனிதா...!

தயக்கம் ஏனடா...!

தோல்வியும்
தொடங்கட்டும் இனிதா...!

வாழ்க்கை உனக்கு கற்றுத்தரும் தினம் தினம்... புதிதா....!

தொடரட்டும் 
வாழ்க்கையை நோக்கி
உன் போராட்டம்... எளிதா....!

திசை அறியாத 
உன் திண்டாட்டம்..!
 
திசை அறிந்தால் 
உன் வாழ்வில் கொண்டாட்டம்...!

திசை அறிந்தவுடன் வேண்டாம் உனக்கு தற்பெருமை எனும் ஆட்டம்..!

தேடித் தேடி தேடிய  
உன் இலக்கை அடைந்தாலும்..!

ஆடி ஆடி... தற்பெருமை உன்னை அழித்தாலும்...!

வீழ்வதும் ஒரு நாள் வாழ்வதும் சிலநாள் மறவாதே ஒருநாளும்..!


பிஞ்ச செருப்பு இட்டு கால் பிளக்க கத்திரி வெயிலில் நடந்தாலும்..!

பிஞ்ச செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் நடப்பவர்களை கண்டு 
விரைந்து செல் நிற்காதே ஒருநாளும்...!

வாழ்க்கையை நோக்கி 
ஓடு பவனுக்கு பாதை அறியவில்லை எனில்...!

பலநூறு வருடம் ஓடினாலும் கைகொட்டி சிரிக்கும் மரத்தில் நிற்கும் அணில்....!

இலக்கு ஒன்றை உன் மனதில் விதைத்து...!

வறுமை எனும் வாட்டலை உன் மனதில் புதைத்து...!

விரைந்து செல் மனிதா விரைந்துசெல் இந்தஉலகமே ஒரு நாள் வந்துசேரும் உன்னை மதித்து...!

இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் தன் தேவைகளை பயமில்லாமல் தானே பூர்த்தி செய்கிறது...!

மனித இனம் மட்டும் தன் தேவைக்கு மிஞ்சிய பூர்த்தியை
அடைவதற்கு
வாழ்க்கையைக் கண்டு பயந்து மனம் தளர்கிறது...!

தேவைக்கு மிஞ்சிய 
தேடலை தேடாத மனிதனின் மனம் மரணம் வறை மனம் குளிர்கிறது...!

உன் உடல் சோர்ந்தாலும்... 
உன் மனம் சோராமல் உயரத்தில் ஏறி நின்று பார் நீ பார்த்து பயந்த உலகம் உனக்கு கீழே தெரிகிறது....!

உருவாக்கம்❣️உங்கள் நண்பன்...தமீம்✍️💌

மேலும்

தமிழே.... 
நீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...!

(இல்லையெனில்)
வைகாசியில் வளர்ந்தாயோ...!

(இல்லையெனில்)
ஆனி மாதத்தில் இந்த உலகை ஆண்டயோ...!

(இல்லையெனில்)
ஆடி மாதத்தில் எங்களின் மரபுக்குள்
புகுந்தாயோ....!

(இல்லையெனில்)
ஆவணியின் 
கண்மணி தமிழே.. 
தமிழரை காதலிக்க வந்தாயோ...! 

(இல்லையெனில்)
புரட்டாசியில் எங்கள் உயிருக்குள் புகுந்தாயோ..!

(இல்லையெனில்)
ஐப்பசியில் எங்களின் 
உணர்வின் பசியை தீர்த்தாயோ....!

(இல்லையெனில்)
கார்த்திகையில் இவ்வுலகிற்கு கால்பதித்தாயோ...!

(இல்லையெனில்)
மார்கழியில் எங்களின் இதழ் வழி நுழைந்தாயோ....!

(இல்லையெனில்)
வள்ளுவனின் 
வழி வந்த தை மாதத்தில் 
தான் பிறந்தாயோ....!

(இல்லையெனில்)
மாசியில் எங்கள் நெஞ்சத்தில் தவழ்ந்தாயோ...!

(இல்லையெனில்)
பங்குனியில் 
எங்களின் உயிரோடு கலந்தாயோ...!

(இல்லையெனில்)
இந்த பனிரெண்டு மாதங்களையும் 
ஒரே நாளில் தான் பெற்றாயோ.....!

என்னாளும் நன்னாளே.....!
தமிழன் என்று சொன்னாலே....!
அன்நாளும் பொன்னாலே.....!

என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..❣️💌 create by ✍️ thamim ✍️

மேலும்

முனிவருக்கும் பாடம் புகட்டும்

முனைவர் பிறந்த தினம் இன்று...


இந்தியா சுதந்திரம் பெற்றாலும்  இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை என்று தீர்ப்பு எழுதினீர்  அன்று....


இந்தியாவின் சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என்ற மமதையில்

தாண்டவமாடியது பாசிச தந்திரம்...!


தகர்த்து எறிந்தது பாபா(சாகேப்)வின் சட்டம் எனும் மந்திரம்....!


சிதைந்து கிடந்த

எம் சமூகத்தை

சீர்திருத்த வந்ததொரு சிகரம்...!


இந்திய மண்ணில் எவராலும் தொடமுடியாத சரித்திரத்தின் உயரம்....!


பாபா(சாகேப்)

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்....


சமநீதி சாசனத்தின் சரித்திரம் எழுத காகிதத்தில் இடமில்லை....!

பேனாவிலும் மை இல்லை....!

உம் சட்டத்தில் பிழையில்லை...!

உம் பிழையைத் திருத்த

வருபவர்களும் இங்கு குறையில்லை...!

நீங்கள் அழிக்க துடித்த

தீண்டாமைக்கு இங்கு பஞ்சமில்லை...!

நீங்கள் ஒட்ட நினைத்த ஒற்றுமைக்கும் இங்கு இடமில்லை...!

இதுவே எம் பாரதநாட்டின்

புதுமை மிக்க சமநீதி எல்லை.....!

Create by ✍️ thamim ✍️

மேலும்

வெளிநாட்டு வாழ்க்கை...
சிறகடித்து பறந்த  கிளி..
சீமைக்கு பரந்து சென்று ஆனதென்ன பலி...

வறுமையின் பிடியால் வாடினான் செடியாய்..
குடும்ப சுமையை சுமந்தான் மரமாய்...
அவனது ஆசைகளை 
புதைத்தான் ஒரு ஓரமாய்....
பாலைவனத்திற்கு பறந்து சென்றான் 
நண்பர்களையும் உறவினர்களையும் வாழ்ந்த கிராமத்தையும் விட்டு மனது நிறைந்த பாரமாய்......
அங்கு இறங்கியவுடன் 
சுற்றித் திரிந்தான் தாகமாய்...
அவனது கண்ணீரையே குடித்தான்
மனதில் நிறைந்த வலிகளுடன் சோகமாய்....

காய்ச்சல் வந்தாலும் கண்டுகொள்ள ஆளில்லை...
மாய்ச்சல் வந்தாலும் படுத்துறங்க மனமில்லை...

ஓடினான் ஓடினான்
வறுமையை உடைத்தெறிய..
சுமை களுக்கு விடை தெரிய...
சரணடைந்தான் பிணைக்கைதியாக அயல்நாட்டில்...😭
சீமைக்கு சென்றாவது சீமானாக ஆகி விடலாம் என்ற எண்ணத்தில்.....

அவனது குடும்ப சுமையை குறைந்தன..
அவனது வறுமையின் பிடியோ உடைந்தன..
அவன் வாடிய பொழுது வராத உறவினர்களும் அவனை சூழ்ந்தன...
என்ன பலன் ..என்ன பலன் ..என்ன பலன்..
என்று கூறி அவன் மனது குறுகி அழுதன...

தலையில் சுமையை தாங்கி தலைமுடியை பறிகொடுத்தான்...
அவன் வாழும் வயதை அயல்நாட்டிலே தொலைத்தான்...
தன் வயதை பறிகொடுத்து தன் குடும்பத்தாருக்கு வாழ்வு கொடுத்தான்...

தன் சுமை தீர்ந்ததோ என்று என்னி இனியாவது நம் வாழ்க்கையை தொடங்கலாமே என்று கூறி அவன் பிறந்த நாட்டிற்கு விரைந்து சென்றான் ......

அங்கு சென்றவுடன் சில நாட்கள் கழித்து தன் குடும்பத்தாரோ மீண்டும் எப்பொழுது செல்வாய் என்ற சொல்லைக் கேட்டு பரிதவித்தான் பிணைக்கைதியாக......

வேண்டாம் மனிதா வேண்டாம்...
வெளிநாட்டிற்குச் சென்றால்தான் உன் வாழ்வில் வெற்றியடையலாம் என்ற மாயை உடைத்தெறி....... உன் சொந்த நாட்டில் வெறி கொண்டு உழைத்திடு நெறிகொண்டு உயர்ந்திடு.....

Create by.. thamim💌✍️✍️

மேலும்

மனிதன் குழந்தையாய்ப் பிறந்து..
வாலிபனாய் வளர்ந்து...
ஆண் மகனாய் தன் வீட்டை ஆழ்ந்து...
மீண்டும் குழந்தையாகவே ..இறக்கிறான்...

மனிதன் அரை நூற்றாண்டை தழுவினால்
மீண்டும் ஒன்னரை வயதை மனதளவில் தழுகுவான் ......அவனே மனிதன்.....

வயதான குழந்தைகளை குறை கூறாதீர்கள்... கொஞ்சி விளையாடுங்கள்..

✍️தமீம்✍️

மேலும்

மேலும்...

மேலே