எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நீ வந்து வந்து போராய் போராய்
என் விடிவெள்ளியே
நான் உன்னை கானவேண்டும் எந்தன்
மஞ்சள் வெயிலே
மேகத்தை கசக்கி உன்னை
குளிர்விற்பேன்
பூவிதழ்களில் உறங்கவைப்பேன்
பாட்டுப் பாடி நானே பாலமமைப்பேன்
அந்த பாலத்திலே உனக்காக பூஞ்சோலையமைப்பேன்
உனது நன்கூரக் கண்களால்
எனை கட்டி இழுத்தாய்
வடிவாகப் பேசி உனக்குள்
கொன்று புதைத்தாய்
இப்போது என் மனம்
சுடுநீர் நீர் பட்டதுபோல் துடிக்கிறது
சிலநேரம் கண்ணீர் வடிக்கிறது
வெட்ட வெளியில்
வேதனையுடன்
சின்ன சிறுவன்
சினுங்கிய முகத்துடன்
சிவந்த கண்ணங்கள்
என்ன நடந்ததோ
யார் கண்டா
கனவிலும் காணாத
தோற்றம்
கண்கள் கலங்கியது
படிக்கும் வயதில்
அவன்
பன்றிக்குட்டிபோல்
முகத்தில்கறை
படிந்திருந்தது
சின்னசிருவன்தனே
சில்லறை காசு
என்றாலும்
சின்ன பசிக்கு
உதவும்தனே
ஐயோ பரிதாபம்
அயல் வீட்டில்
நடந்த சம்பவம்
நான் சொல்லத்
தேவையில்லை
உங்களுக்கே
புரிந்திருக்கும்
மனது என்னமோ யோசிக்குது
அது யாரோ உயிருக்காக சுவாசிக்குது
பாலைவன காற்றாய்
எப்போதும் என் நினைவுகள்
சூடாகத்தான் இருக்குது
பற்றவைத்த குப்பையில்
பற்றாமல் இருக்கும்
இலைபோல் நான் மட்டும்
தனியாகவே இருக்கிறேன்
கடவுள் ஒன்றுதான்
இத நான் சொல்லல
சில நல்லவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்
இவ்வுலகம் லின்கவடிவாலானது
இதுதான் உண்மை
எமது உடலில் உள்ள
உடல் பாகங்களும்
மகரந்த மணிகள் கொண்ட
மலர்களும்
மசூதியும், விகாரையும்
அப்படித்தான் இது புரிவதில்லை
சிலருக்கு
கிருஷ்னர், கிறிஸ்து பிறந்தது
ஒரே இடத்தில்தான்
அதுதான் மாட்டுத்தொழுவம்
நாம் பிரிவால் பிரிந்து
மனதை மடக்கி மண்டியிட வைத்திருக்கிறோம்
மதம்
என்ன்ற பெயரால்
வெட்டுவதும் உடைப்பதும்
பழிவாங்குவதும் என
எமது ஊத்தவேலைகள்
நடக்கின்றன
இறைவன் இருப்பது
உண்மை என்று நம்பும்
நாம்
இறைவன் பல என்றால்
அ (...)
நினைவுகள்
சிறு மொழி பேசி சின்ன குறும்புகள்
செய்த காலம் எல்லாம் என் நினைவில்
வந்துவந்து போகும் அதை நான் உங்களுக்கு
சொல்லப்போகிறேன்
அன்று ஒரு நாள் நான் பாலர் வகுப்பில்
இருந்தேன் அங்கு பல குழப்படிகள்
வகுப்பாசிரியர் கையால் அடி வாங்கி
அழுது கொண்டு வீடு ஓடி வந்து
நான் இனி அங்கு போகமாட்டேன்
என அம்மாவிடம் சொன்னது
எனது நினைவில்
அந்த நாட்கள் உருண்டோடி போன பின்னே
நான் பெரிய வகுப்பில் படிப்பதாக உணர்ந்தேன்
விளையாட்டு படம் பார்ப்பது
என திரிவதுதான் எங்களுக்கு வேலையாக
இருந்தது படிப்பில் புள்ளிகள்
எடுப்பது குறைவு
வீட்டில் ஒவ்வொரு நாளும்
பெரிய முழக்கம் என (...)
நாளை எல்லாம் மாறும்
நாச்சத்திரங்கள்
மண்ணில் வந்து
விளையாடும்
சூரியன் நடுவானில்
சுழன்றாடும்
ஒருவேளை சந்திரனில்
பாட்டி வடை சுடலாம்
மேகங்கள் வீட்டு வாசலில்
உறங்கும்
இவ்வாறு நாடக்க
மனிதர்கள்
மறைந்து விடுவார்கள்
நல்லவர்கள் மட்டும்
உயிருடன்
இருப்பார்கள்
பதிவுகள்
நடக்கும் கொடுமைகள்
நடந்து முடிந்த கொடுமைகள்
எல்லாம் நாமறிந்ததுதான்
கொலை செய்தவனுக்கு
தூக்கு தண்டனை என்கிறது
சட்டம்
ஒரு இனத்தை அழித்தவனுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
நீங்களே சொல்லுங்கள்
எங்களுக்கு தெரியும்
மனிதநேயம் மாண்டுபோனதும்
மனிதஉரிமை சவக்குழிக்குள்
இருப்பதையும்
குடும்ப அதிகாரம்
தாண்டவமாடுவத்தையும்
சில தேவைகளுக்காக
சுயநலத்துக்காக
முதலைக்கண்ணீர் விடுவதும்
எங்களுக்கு தெரியும்
உங்கள் புதினங்கள் ...................
இன்னும் இருக்கு
சொல்லமுடியல .....
இது நவீன காலம்
நல்லவர்களை காண்பது அரிது
மனிதநேயம் இங்கு
ஒவ்வொருமுறையும் சாகடிக்கப்படுகிறது
மனிதனுக்கு மரணம்
உண்டு என்பது பற்றி
வாழும்போது நினைப்பது குறைவு
அதனால்தான்
நடக்குது கொடுமைகள்
சுயநலம்தான்
இங்கு பெரிதாக
இருக்கிறது