சௌந்தர்- கருத்துகள்

நன்றி நண்பா... இறை உபாசனை செய்பவர்கள் தாங்கள் வழிபடும் இறைவனை செம்மை நிறமாய் தியானிப்பார்கள்... அபிராமி அந்தாதியில் உதிக்கின்ற உச்சித்திலகம் என செம்மை நிறமே முதலில் குறிக்கப்படும், முருகனின் நிறமும் சிகப்பென்பர் அன்பர், அதனை முன்னிட்டே நான் சிவப்பாகி என குறிப்பிட்டேன். தற்போது அதனை சிவமாகி என திருத்தம் செய்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...

அழகனான நடை... சிறப்பு நண்பா!!!

நன்றி நட்பே!!!! நீங்கள் கூறிய முடிவுகூட பொருந்துகிறதே... இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை... கருத்துரைக்கு நன்றி!!!

நன்றி!!! உண்மை நண்ப!!! அதிலும் குணங்களும் உண்டு...

அன்பு நண்ப... வானம்பாடி காலத்தின் பதுக்கவிதை மட்டுமே புதுக்கவிதை என்னும் சொல்லும் உங்கள் கருத்து ஏற்புடையதல்ல... ஒரு கவிதையில் மாற்றம் செய்வது என்பது அந்த படைப்பாளியின் விருப்பம்!!! வானம்பாடி காலத்தின் கவிகளே ஒரு கட்டத்தில் தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொண்டனர்... அப்படியென்றால் வானம்பாடி காலத்திற்கு முன்பிருந்த பாரதியும் பாரதிதாசனும் புதுக்கவிதைகள் இல்லையா என்ன? “உள்ளத்து உள்ளது கவிதை; இன்பம் உருவெடுப்பது கவிதை” என்னும் கவிமணியின் கவிதை மரபுகளுக்கு தங்கள் பதிலென்ன?? கவிமணியும் பாரதியும் காட்டிலுமா நாம் பெரிய கவி ஆகிவிட்டோம்?

அன்பு நண்ப... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... புதுக்கவிதைகள் அப்படியொரு மரபு பெற்று வரவேண்டியதில்லை என நான் நினைக்கிறேன், மேலும் இங்கு பாடுபொருளாக நான் நதியினைக்கொள்ளவில்லை... என் பாடுபொருள் மனிதன், அதன் தாக்கத்தினை உணர்த்தவே நான் இது ஒரு நதி என்னும் தொடரினை அதிகமாக கையாண்டு உள்ளேன் என நினைக்கிறேன்... மேலும் இந்த சீர் அடி இப்படி அமைக்கப்பெற வேண்டும் என நான் எந்த ஒரு கோட்பாடும் கொண்டு எழுதவில்லை, என் உள்ளத்தில் தோன்றிய உணர்வினை ஒரு நிலையில் உட்கார்ந்து எழுதினேன்... பின்னர் சமநிலை வந்த பின் ஒரு ஓரிரு முறை படித்துப்பார்த்து பதிவிட்டேன்... ஆனால் தங்கள் கருதும் மிக முக்கியமானது, விவாதங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் அறிவுசார் சிந்தனையின் ஊற்றுக்கண் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.. இதை மேலும் எடுத்துச்செல்லவும் விமர்சனங்கள் தேவை... மேலும் வருக நல்விமர்சனங்கள் தருக!!!

மிக்க நன்றி நண்ப!!!

அருமையான கவிதை சாடல்!!!

அய்யா மிக்க நன்றி!!! என்னை மென்மேலும் வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள்...


சௌந்தர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே