சிபி.வித்யாகரண்- கருத்துகள்

பொழுது போக்கிற்காகவும், தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலும் .. .. .. .. .. !!

மண்ணுக்கும் மரத்துக்குமான அன்பை, பாசத்தை, காதலை
கவி வரிகளாக வடித்த உம்மை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை தாயே...!

கவி மிகமிக அருமை...
பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கும் காலம் போய்,
பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை...

" உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...! "

இந்த வரிகளும் சிருசுதான் ...
அவை உணர்த்தும் வார்த்தைகள் பெருசுதான்...

ஒரு சிற்பிக்கும் அவரது உளிக்கும் உள்ள காதல் பரிமாற்றங்களை கவி வரிகளாக வடித்த உம்மை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை...

தோழி கவி மிகமிக அருமை...
( என்னவளை நினைத்து தூக்கத்துடன் சேர்த்து வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களுக்குத்தான் இந்த கவி வரிகளின் ஆழம் புரியும் )

சவக்குழி - கவி அருமை...

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே நிம்மதியாய் வாழ எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு...

சவக்குழிக்கு போகும்போது நம்மோடு எதுவும் வரப்போவதில்லை...

கேவலம் இந்த பணம் என்னும் காகிதத்திற்காக ஊர் விட்டு ஊர், கண்டம் விட்டு கண்டமெல்லாம் செல்ல வேண்டியிருக்கிறது...

சவக்குழியை நினைத்துப் பார்த்தால், யாரும் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார்கள்...

இப்புவிக்கு நாம் வந்தது ஒருமுறை தான் - இனி ஒரு
ஜென்மமென்பதை நீயும்நானும் கண்டதில்லை - ஆகவே
பிறருக்கு உதவி புரியாவிடிலும் உபத்திரவம் செய்யாமலிருத்தலே மிக நன்று...

( கவியைப் படித்ததும் எதாவது சொல்லணும் போல இருந்துச்சு. கருத்தில் தவறுகலேனுமிறுப்பின் மன்னிக்கவும் )

வாழ்த்திய தோழமை அனைவருக்கும்
என் நன்றி...!

அழகு என்பது பார்வையில் அல்ல,
நம் உணர்வில் தான்...


சிபி.வித்யாகரண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே