maruthu pandian- கருத்துகள்
maruthu pandian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [38]
- மலர்91 [24]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [11]
மரங்களை வளர்க்க போதிக்கும் அரசாங்கமே வளர்ச்சி என்ற பெயரால் மரங்களை வெட்டி எறிவது தாளாத துயரம். சில மரங்களை வெட்டி எறியும் போதெல்லாம் புதிய மரங்களை நட்டுவிட்டுத்தான் வெட்ட வேண்டும் என்பதை அரசாங்கச் சட்டமாக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. அது போல், சிலரின் வாழ்க்கையையும் பறிபோகாமல் காக்க வேண்டும் ..... ஏனோ தெரியவில்லை. ... கவிதை படித்து முடித்தவுடன் கண்ணிலிருந்து நீர் வருவதை என் யதார்த்த அறிவால் தடுக்க முடியவில்லை..............
அன்புடன் - மருதபாண்டியன் -
நாம் குள்ளமாகிவிடுகிறோம்...
============================
நம் குழந்தைகள்
அவர்களை அளவுகோலாக்கி
நம்மை அளக்கையில்...
வளர்வதென்னவோ
குழந்தைகள்...
=>=>=>=>=>=>=>=>=>=>=>=>=
கவிதையை ஆரம்பித்த இந்த இடத்திலேயே உங்கள் கவிதைக்கு உயிர் வந்து விட்டது. இலாவகமாய் வாசகனைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்கிறது..........
தெரிந்த உண்மைகள்தான் தோழி! ஆனால் தெளிந்த வார்த்தைகளில்... உண்மை சுடும் என்கிறார்கள் ... சுடாமலும் உண்மை சொல்லும் மந்திரம் உங்கள் தமிழில் உண்டு. மனம் திறந்த பாராட்டுக்கள் !
அன்புடன் தோழன்,
மருத பாண்டியன்.
உடனடி பதிலா? திகைப்பூட்டுகிறது. ஒரு நல்ல நட்பூ இன்று பூத்திருக்கிறது. என்றும் மணம் வீசட்டும்.
அன்புடன்
உங்கள் தோழன்.
நன்றி தோழரே! வாழ்த்தும் மாமனித குணத்தை தலை குனிந்து வணங்குகிறேன்.
மனிதராய்ப் பிறந்தது ஒரு முறை. மாமனிதராய்ப் பிறப்பது எந்நாளோ ? அந்த நன்னாள் விரைவில் வர வேண்டும் என்பதே இந்தத் தோழனின் அவா.
இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கிறது தங்கள் பாராட்டு. நன்றிகள்....
தோழரே! பாராட்டும் நல்ல குணத்தை தாங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். நல்ல படைப்பை பாராட்டினால் என் தமிழ் வளரும் என்பதால் நான் பாராட்ட வந்தேன்; ஆனால் இப்போது சீராட்டி மகிழ்கிறேன். உங்கள் வலியும் வேதனையும் உணர்கிறேன். தமிழன் கைகளில் தமிழ் ஆயுதமாக இருக்கும் வரை சிறகு தரும் சாபங்களை அவன் வரமாக மாற்றிவிடுவான். இது நிச்சயம். வயதில் சிறியவராக தாங்கள் இருப்பினும் 'தம்பி' என்றழைப்பதை விட 'தோழரே' என்று அழைப்பதில் நெருக்கம் அதிகம் இருப்பதை உணர்கிறேன். "தணல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!" தத்தரிகிட... தத்தரிகிட... தித்தோம்.
மிக்க நன்றி தோழரே! படைப்புகளைப் பாராட்ட முதலில் நல்ல மனம் வேண்டும்; அந்த நல்ல குணம் உங்களுக்கு அத்தனை பெருமையும் கொடுக்கும். படைப்பு சேர்த்து வைக்கும் இந்த பந்தம் மிக நீண்ட நாட்கள் நிலைக்கும். மறுபடி நன்றிகள் தோழரே!
மற்றவர்களை மதிக்கும் பண்பு உலகத்திலேயே சிறந்த பண்பு. சக மனிதர்பால் நீங்கள் காட்டும் இந்த அன்பும் அதற்குள் வெளிப்படும் பண்பும் மிகச் சிறப்பு.
ஹிந்தி கற்றுக்கொண்டால் தமிழன் மகுடத்தில் இன்னொரு இறகு பதிக்கப்படுகிறது என்று பொருள். இயற்கையாகவே தமிழன் போராடும் குணம் கொண்ட இனம். தாய்மொழி மூலமாக இயற்கை அறிவும் ஆங்கிலம் மூலமாக உலக அறிவும் பெற்று விடுகின்ற தமிழனக்கு தொடர்பு மொழியாக ஹிந்தியும் கிடைத்து விட்டால் அவன் பெறுகின்ற பணமும் மரியாதையும் கணக்கிட முடியாது. நான் இப்போது குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் உள்ளேன். என் பாட்டனும் பூட்டனும் எனக்கு தமிழ் மூலமாகக் கொடுத்த அறிவோடு உலக மொழியாம் ஆங்கிலத்தில் நான் கல்வி கற்றுக் கொடுப்பதை அனைவரும் பாராட்டுகிறார்கள். அவர்களோடு அன்னியோன்யமாய் உரையாட ஹிந்தி கற்று வருகிறேன். நான் தமிழகம் வரும்போது இன்னும் நிறைய அறிவுச் செல்வம் எடுத்து வருவேன். அன்புடன் - மருத பாண்டியன் (20/05/2013)
எளிதில் எழுதமுடியாத ஒரு கருவை எடுத்துக் கொண்டு இனிமையாய் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். கணந்தோறும் நழுவும் உணர்வுகளை சிறைப் படுத்தியிருக்கிறீர்கள். அது கவிதை ஆகி இருக்கிறது .நல்ல கவிதைக்கு நன்றிகள்.
உங்கள் படைப்புகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் தங்கள் எழுத்துகள் பற்றி தங்களுக்கு எழுதுகிறேன். இந்தக் கவிதையைப் பொருத்தவரை அழகை வர்ணனை செய்யும் ஒரு இலக்கியக் கவிஞனைக் கண்டேன். பாராட்டுக்கள்.
நன்றி நண்பரே! படித்துவிட்டு பாராட்டும் குணம் தங்களிடம் உள்ளது. தங்கள் வைர குணத்தில் பட்டை தீட்டுவது போல உள்ளது தங்கள் வைர வரிகள். மறுபடி நன்றிகள்.
என் கவிதைகளைத் தொடர்ந்து வரும் தங்களுக்கு என் நன்றிகள். வாசிப்பு உங்களையும், பாராட்டு என்னையும் எப்போதும் வளர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை நண்பரே!
தங்கள் பாராட்டு என் கவிதைகளை வளர்க்கும். சந்தேகமே இல்லை. நன்றி நண்பரே!
நல்லது நண்பரே! நன்றிகள்! நல்ல கவிதைகளை நான் தேடிச் சென்று படித்துவிட்டு மனம் திறந்து பாராட்டுவதுண்டு. என் கவிதைகள் தங்களால் நீர் வார்க்கப்பட்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. மறுபடி நன்றிகள். தொடர்ந்து வாசியுங்கள் .....
தடை எதுவும் இல்லை. உங்கள் ஆசைகள் நிறைவேறும். நான் இருக்கிறேன். விரைவில் நிறைவேற்ற !