எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆவாரம் பூ நிழலில் ___ஆதாம் ஏவாளாக நிற்போமா !...

ஆவாரம் பூ நிழலில்
___ஆதாம் ஏவாளாக நிற்போமா ! 
ஆதிவாசி காலம் சென்று
___ உச்சம் கற்போமா !... 

பூச்சூடும் நாள் முதலாய்
___பூவரசி நீயென் சொந்தம் ! 
பூவுலகம் இருக்கும் வரை
___பூக்கவேண்டும் நம் பந்தம் !... 

சிதறும் மலர்க ளுன்னை
___சிணுங்க வைக்க காத்திருக்கும் ! 
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
___சிந்தையில் நின்று ஒலித்திருக்கும் !... 

மதம்பிடித்த யானையை உந்தன்
___முந்தானையால் கட்டி இழுத்திடலாம் ! 
முத்தமிட்டு முத்தம் வாங்கி
___முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம் !... 

வளமையின் உச்சம் கண்டு
___வண்ணத்துப் பூச்சியும் வசமாகும் ! 
விடையில்லா கேள்விக்கு - இவள்
___விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !... 

எழுத்தோடு இணையும் 
        ... #ராஜேஷ்...

நாள் : 21-Sep-19, 7:42 am

மேலே