விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும் கவிஞன்..!!

எதிர்பார்ப்புகளின் ஏகப்பட்ட
முகங்கள் மாறுவேடத்தில்...!!!

ஆள் அரவமற்ற அத்துவான காட்டில்
ஒரு நாள் பொங்கலுக்கு தவமிருக்கும்
அய்யனார் சாமி...!!

யாரும் வராத பொட்டல் பூமியில்,
தேநீர் கடை போட்டிருக்கும்
யாரோ ஒருவன்..!!

சோறூட்ட அம்மா வருவாள்
என ஏங்கி தவிக்கும்
அனாதை சிறுமி..!!

இருளில் ஒற்றை பனை மர அடியில்,
தன்னை விலை பேச காத்திருக்கும்
விலை மாது..!!

எந்த கவலையுமின்றி
பிணங்களின் வரவை நோக்கும்
புதிய சுடுகாடு..!!

குறை சொல்ல கூட ஆளில்லையே
என கண்ணீர் சிந்தும்,
உருவமில்லா ஓவியம்.!!

வரமாட்டார் என தெரிந்தும்,
வரவில்லையென புலம்பும்
கடவுள் பக்தன்..!!

ஒருநாளாவது யாரும் தன்னிடம்
எதுவும் கேட்க கூடாதென நினைக்கும்,
அதிசய ஆண்டவன்..!!

விளையாட யாருமின்றி துடிக்கும்
இடித்தாலும் சிரித்து வந்த
தெருமுனை உரல்..!!

யாரும் அமரவில்லையென
ஒற்றை காலில் நிற்கும்,
நிழலில்லா இருக்கைகள்..!!

நன்றாக இல்லை என்ற போதும்,
விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும்
ஒன்றுமறியா கவிஞன்..!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Mar-13, 2:59 pm)
பார்வை : 118

மேலே