என்றும் மாறாத உண்மை

சூரியனை வீழ்த்தி மண்ணில் புதைக்கிறேனென்றே ஊராரிடம் சூளுரைத்து
மலையுச்சி மீதினில் ஏறியவன்,
சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தன் காலைத் தூக்கி சூரியனை மிதித்து மண்ணில் புதைப்பதைப் போல் பாவனை செய்து,
ஊராரை அழைத்துக் காட்டி மகிழ்ந்தான்,
அஸ்தமித்த சூரியன் புத்துயிர் பெற்று விடியலிலெழுவானென்பதை அறியாமலே....

(சூரியனை உண்மையோடு ஒப்பிடுகிறேன்.)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Dec-16, 7:00 pm)
பார்வை : 754

மேலே