ஈடேது இணையேது

பசுமை புல்வெளியில்
நீலவான் கூரை கீழ்
பூத்துக் குலுங்கிடும்
வண்ணமிகு மலர்கள்
இறுகிய நெஞ்சையும்
உருக்கி தளர்த்திடும்
கடின இதயத்தையும்
வருடி இதமாக்கும் !

படத்தின் காட்சியை
பார்த்து ரசிப்பவர்க்கு
பற்றிடுமே பரவசம்
வழியுமே விழிகளில்
நிறைந்திட்ட நவரசம்
இயற்கை தந்திடும்
இன்பத்திற்கு என்றுமே
ஈடேது இணையேது ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-May-13, 12:29 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 72

மேலே