உன் காதல் என்னும் வலையில் விழுந்தேன் நான்.

என்வுடையவனே

உன் காதல் என்னும்
வலையில் விழுந்தேன் நான்.

என் அம்மாவின் அன்பை
அறிய முடிய வில்லை,

உன் காதல் என்னும்
வலையில் விழுந்ததால்.

என் தந்தையின் பாசத்தை
அறிய முடிய வில்லை.

உன் காதல் என்னும்
வலையில் விழுந்ததால்

என் சகோதரனின் நேசத்தை
அறிய முடிய வில்லை.

உன் காதல் என்னும்
வலையில் விழுந்ததால்

என் தோழியின் நட்பை
அறிய முடிய வில்லை.

உன் காதல் என்னும்
வலையில் விழுந்ததால்

நான் வேண்டம் என்று
நீ
பிரிந்து சென்ற பின்புதான்

நான் அறிந்து கொண்டேன்
உன்னை விட
இவர்கள் பாசம்
உலகில் பெரியது என்று.

எழுதியவர் : g ,m .kavitha (8-Jun-13, 5:47 pm)
பார்வை : 186

மேலே