என்ன செய்ய காத்திருக்கிறோம்

பாரினிலே நல்ல நாடு,
நம் பாரத நாடு,
மதம் பிடித்ததினால்
வந்தது கேடு,
நிலை கெட்டதடா
அன்றோடு

பசிக்கு அன்னமிட்ட
பாரதப் பண்பாடு
கதி கலங்கி நிற்குது
பட்டினியின் நெஞ்சோடு
உயிர் போகாமல்
ஓடுது சுடுகாடு

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

ஆள்பவன் சுத்தமில்லை – அவன்
ஆசையும் விட்டதில்லை
மக்களை மறந்தின்று
நாட்டையும் மறந்து விட்டான்
அரியணையில் ஏறியவன்
அதிகம் உறங்கி விட்டான்.

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

உழைப்பாளி உசுர எல்லாம்
முதலாளி உறிஞ்சுடுறான்
அப்பாவி காச எல்லாம்
கடன்காரன் பறிச்சுடுறான்

தேச சண்டையில
உலகம் ஆடுதடா
ஆத்து சண்டையில
நாடே மாறுதடா
ஜாதி சண்டையில
வீதி நாறுதடா
வேலி சண்டையில
வீடே ஓடுதடா

பாதி முடியும் முன்னே,
மீதி போன தெங்கே
பாவம் தீரும் முன்னே,
கங்கையும் தீருமங்கே

எழுந்திடுவோம்
நம் வேகத்திலே
முடித்திடுவோம்
நம் காலத்திலே

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

எழுதியவர் : விஜய் செ (14-Sep-13, 6:44 pm)
பார்வை : 118

மேலே