பூவையவள்

அடும்பு பூவே !
அதிரல் மலரே !
உனை தொட நீ
எனை படருவாயா ?

அவரைப்பூ ! மூக்கே !
நுகர்ந்தால் நீ
மணக்கும் சந்தனப்பூ வோ
நுகர்ந்தபின் வாடிவிடும்
அனிச்சைப்பூ
அல்லவே? நீ

ஆவல் நோயில்
நானிருக்க நீ
ஆவாரை பூப்போல
குணப்படுத்திடுவாயா ?
ஆத்திப்பூ வாக –எனை
சுத்தி வருவாயா ?

இரவு தனிமையில்
இலவம் பூவாய் நானிருக்க
இருள்நாறிப்பூவாய்
கவர்ந்திட வருவாயா ?
ஈங்கை பூவே !
வேங்கை எனை
வருட வருவாயா ?

பூவே வருவாயா ? –உனை
பூஜிக்க காத்திருக்கிறேன் .
வருவாயா ?


------------------------------>இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (15-Sep-13, 12:24 am)
பார்வை : 252

மேலே