யாருமற்ற.....
யாருமற்ற.....
தனி தீவு ஒன்றில்
தவிக்கும் நிலை,
செய்வதறியா
திகட்டும் வாழ்க்கை,
தூரத்தெரியும்
ஏதோ ஒன்றை
துணைக்கு வேண்டி,
வானவில்லாய்
மறைந்து போக
அடுத்த மழைக்காலம்
அவசரம் வேண்டும்,
அன்புகளை பிட்டு பிட்டு
அங்கொன்றும் இங்கொன்றும்
வீச கவ்விச்செல்லும்
கனவொன்றில் காலம்
தன் துடுப்பை நகர்த்த
ஏதோ செல்கிறது
பயணம் மெதுவாய்
தூரமாய்??