ஆசை ரேகைகள் .. !

எல்லா
ரேகைகளும்
தாறு மாறாகவே
தடம் புரண்டு
கிடக்கின்றன
என் விதி ரேகையின் மீது ...!

ஆசை ரேகை
காதல் ரேகை
காம ரேகையென
இளமையில்
என்
உள்ளங்கைக்குள்
எத்தனையோ
ரேகைகள்
துளிர் விட்டு
வளர்ந்தன
படிப்பு ரேகையைத்தவிர ...!

சின்ன வயது
முதலே
அடிக்கடி
காணாமல் போகிறது
அழிப்பான்....!

வகுப்பறையில்
காதலி திருடிய
அழிப்பனால்
சண்டையும்
வந்தது காதலும் வந்தது ...!

என்னில்
முளைத்த
காதல் பயிர்கள்
பாரி வள்ளலின்
தேர் மீது
படர துடித்தே
வாடி வீழ்ந்தது ....!

காதல் ரேகையும்
ஆசை ரேகையும்
அலைந்தும்
வளைந்துமே
கிடக்கிறது என் கைகளில் ...!

வகுப்பறையில்
தொலைந்து போனது
வாழ்கையிலும்
தொலைந்தே போகிறது ....!

அனுபவ
அழிப்பானால்
அழித்தே தேய்ந்தது
என் வயதும் வாலிபவமும் ....!

மனைவியின்
பாச அழிப்பான்
மட்டுமே
சரி செய்தது
என் காதல் ரேகையை ...!

எவ்வளவு
தேய்த்தும் இன்னும்
விதி ரேகையை மட்டும்
திருத்தி எழுத முடியவில்லை ...!

பண ஆசையும்
பதவி ஆசையும்
சிறகுகள் கட்டி
விமானமாய்
பறக்குது எல்லை தாண்டி ....!

கிளைகளையே
அழிக்க
முடியவில்லை
வேர்களை
எப்படி பிடுங்குவது ...?

புத்தனும்
ஆதிசங்கரரும்
எப்படித்தான்
அழித்தார்களோ
விதியின் ரேகையை
அடி நுனி வரை ....!

**************************************************************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (29-Sep-13, 1:37 pm)
பார்வை : 106

மேலே