தாய் வேறு கோணத்தில்
தாயை விட யாரும் இல்லை
அம்மா என்ற சொல்லுக்கு ஈடில்லை
அம்மா அம்மா என்று உருகும் நாம்
அமைந்ததினாலே அவ்வாறு.
தாய்க்கு யாவரும் ஒன்றே
பிடித்த பிள்ளை பிடிக்காத பிள்ளை
என்று பாகுப டுத் துவதில்லை
எல்லாத் தாய்மாரும் அவ்வாறு இல்லையே.
ஒரு கண்ணில் கருணை காட்டுதலும்
மற்றொன்றில் கடுமை காட்டியதிலும்
கண்டேன் அவ்வேறு பாட்டை
என் தாயிடம் வேறு யாரிடமும் இல்லை
அன்பிலே மலைக்கும் மடுவுக்கும்
உள்ள வித்தியாசம் வெள்ளிடைமலை
கொடுப்பதிலே ஏறுமாறான தாக்கம்
ஒருத்திக்கு எல்லாம் மற்றவளுக்கு ஏதுமில்லை.
தாயை மலை போல் நம்பினேன்
அவளை மிக அழகாக நேசித்தேன்
அவளின் திறனை அமோகமாக போற்றினேன்
என்னை அவள் சிறிதெனினும் கருதவில்லை .
என் தாய் என்று அவளை பெருமையாக நோக்குங்கால்
அவள் என்னை பொருட்படுத்தாமல் என்னுடன் கூ டப்பிற ந்தவளுக்கு
தன பாசத்தை அளவில்லாமல் அள்ளிக் கொடுத்தாள்
தன செல்வத்தை வாரி வாரி வழங்கினாள்
பார்த்தேன் அத்தனையும் வெகு அருகிலிருந்து
கேட்டேன் அம்மா எனக்கும் சிறிதாவது கொடு என்று
பொருள் இல்லாவிட்டால் கூட அன்பைக் காட்டு என்று
அவள் கொடுக்கவில்லை இறுதி வரைக்கும் .
இறுகிப் போனேன் என்னுள் வெகுவாக
உடைந்து போனேன் எனக்குள்ளே சுக்கு நூறாக
நான் செய்த பாவம் தான் என்னவோ ? இருந்தும்
தாயை மறக்க முடியவில்லை என்னால் .