கவியின் கடைசி நாள்

அன்பு நம்மை இணைத்தது
காலம் நம்மை பிரித்தது...

எல்லாம் நீ என்று இருந்தேன்.
உனக்காக எல்லாம் துறக்கிறேன் ..

என்றாவது நான் இல்லையென்று
உனக்கு செய்தி வரும் ..

அன்றாவது எனக்காக
அழுவதற்கு உன்
கல் நெஞ்சில் ஈரம் இருந்தால்..

உன் கண்ணீரை சுமந்து கொண்டு
என் கல்லறைக்கு வா.

அங்கும் என் இதயம்
உனக்காக காத்திருக்கும்,

ஆதவன்


எழுதியவர் : ஆதவன் (20-Jan-11, 6:03 pm)
சேர்த்தது : ஆதவன்
பார்வை : 494

மேலே