ரசித்து ரசித்து நரச்சி போச்சி
வானவில் கொண்ட
வர்ணம் கண்டேன்
வாசனை திரவியம்
உன்னில் மணக்க கண்டேன்
சிரிக்கும் அழகில் உன் முகத்தை கண்டேன்
சினம் கொண்ட போது
அழகண்டேன் ,,,
இமை மூடும் போது கனா கண்டேன்
இசையுடன் உன் குரல் கண்டேன்
உன்னை ரசித்து ரசித்து
தலை நரைத்து வெள்ளை நரை கண்டேன்
உன்னால் ,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }