என் தாய்

இறைவனின் படைப்பாய் உலகில்
அற்ப துளியில் அழகாய் நான்
வேதனையுடன் என்னையும் சுமந்தால்
சோதனைகள் பல துவளவில்லை
சுமையாக எனை நினைக்கவில்லை
சுகமாக சுமந்தால் கருவறையில்
அவள் எனக்காக உறங்காத நாட்கள்
அவள் சுவாசத்தில் என் பரிமாணம்
ஈடு செய்ய முடியாத அவள் தியாகம்
வாழ் நாளும் போதாது அரவணைக்க
நிறமும் ,அழகும் ஒரு பொருட்டல்ல
நிஜமான பாசம் என்றும் நிழலாய்
மருந்து உண்டால் எனக்காக அன்று
மறக்கவில்லை நேசிப்பதில் இன்றும்
வாரிசை தந்தால் கணவனுக்கு
தந்தை வாழ்கையை தந்தான்
மண்ணறை செல்லும் வரை மறையாது
தாய் பாசம் என்றுமே குறையாது
தாய் !
அவளுக்காக வாழ்ந்த நாட்களை விட
எனக்காக தேய்ந்த நாட்கள் அதிகம்
ஸ்ரீவை.காதர்-