விலகிச் சென்றவுடன்
தேடாத கணத்தில் தாங்காத வழியில்
விழி கண்ட இடமெலாம்,
நிழலாக நீ..
உயிர் உருகும்,
மெழுகாய்,
மனம் எரியும்,
தீயாய்..
அந்த ஒரு
பார்வை
உயிரை எதோ செய்யும்,
அந்த ஒரு
வார்த்தை...
இடைவெளி
இல்லாத
தருணம்
நிலைத்திட வேண்டியும்
விலகிடவே,
நதியில் விழுந்த இலையாக
தொடர்ந்தது
இந்த பயணம்...
முடியும் என்ற எண்ணத்தை
முடியாது
என்று மறுக்கும்
என் நெஞ்சம்...
இறுதியில்,
முடியவில்லை
என்று முடங்கி விட்டது
எண்ணம்...
கடலில் கலந்த
மழைத்துளியாக,
காற்றோடு கலந்து வந்த
உன் சுவாசம்,
மயில் தொகையாக
வருடி செல்லும் வேளையில்தான் தெரிகிறது
நான் உயிருடன் தான் இருக்கிறேன்..
என்னை அறியாமல்
கண்கள்
அலைபாய...
ரணங்களும்
இந்நேரம் தேனாக ...
எதுவரை எனக்கு இந்த உயிர் வேதனை...?
மழை சென்ற பின்
வரும் வானவிலாக,
விலகிச் சென்றவுடன் விரைந்து சொன்னது
இதயம்,
இதுதான் காதல்...!!!!