குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா

காப்பிக்குள் கண்டேன் நானும்
காலை விடியலின் நிழல்....!

காக்கிக்குள் பிம்பம் தெரியுமோ என
கருத்தினில் குழப்பம் வேண்டாம்...!

காலியான கோப்பையதில் என்
கற்பனையே நிரப்பியது....

காசில்லை ஒரு கப் தேநீர் வாங்க - எனினும்
கனவினிலே கடவுளோடு அமுதப் பார்ட்டி....!!

( காலிக் கோப்பையென்று மேலே
கவிதை வரி சொல் நயத்துக்கே - உண்மையில்
காற்றே அதில் நிரம்பியிருந்தது - எனவே
காலி என்று ஒன்றுமில்லை - நிறைவுதான் எங்கும்

குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா )

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Jan-14, 7:09 am)
பார்வை : 98

மேலே