ஒரு நாள் பிரசவம்

மானுடன் மலை சாய்ந்து
படுக்க
மனமும் மன்றாடி
உறங்க
ஏனைய ஜீவன்களும்
ஓய்வெடுக்க
வௌவால்களும் இறைத் தேடி
முடிய
சிமிட்டுகின்ற கண்களை
விண்களில் காணலாம்.

இந்த விண்மின்களும்
கண்சிமிட்டி அயர்ச்சியுற
நாழியாகி விட்டதை
நாட்டுக்கு அறிவிக்கும்
நாட்டு கோழியும்
'கொக்கரக்கோ' என்று
காலை சங்கு முழங்க,

அதோ எங்கள்
நிசியின் நாயகி
பிரசவிக்கிறாள்
கதிர் கரம் கொண்ட
கதிரவனை - இது
அவளின் ஒரு நாள்
பிரசவம்.
தொடரும்
ஒவ்வொரு நாளும்.

எழுதியவர் : காயத்திரி (24-Jan-14, 11:37 pm)
Tanglish : oru naal pirasavam
பார்வை : 117

மேலே