நீ நெருப்பு நீ நீர்

கசங்கிய பூவைப்போல்
மடியில் கிடந்தாய்
முகத்தினை மறுபடி உயர்த்தி
மீண்டும் வேண்டும் என்றாய்
உதடுகளின் சூடு
இன்னும் தனியவில்லை என்றாய்
என் மீசை நுனி கருகிப்போயின என்றேன்
நீரில் மூழ்கிய தாமரைப்போல்
ஒட்டிக்கிடந்தாய் என் மேல்
இன்னும் என்னை ஆழத்திற்க்கு
கொண்டு போ என்றாய்
ஆழம் சென்ற பின்
கசங்கிய பூவைப்போல
மடியில் கிடந்தாய்...........

எழுதியவர் : (29-Jan-14, 1:13 pm)
சேர்த்தது : காிகாலசுந்தரன்
பார்வை : 224

மேலே