எது நன்றி ?

ஊர் கூட்டி அன்னமிட்டேன்
ஊர் கோவிலில் வாரா வாரம் ,
உயிருக்கு போராடி ஊர் வெளியில் கிடந்தபோது
ஊரில் ஒரு நாதி இல்லை உதவி செய்ய .
ஒரு தெரு நாய் வந்து என் முகத்தை நக்கி ஆறுதலாய் அருகில் கிடந்தது ,
நான் ஒருநாள் இட்ட மிச்ச சோற்றை தின்ற நன்றிக்காக ..............

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா....... (15-Feb-11, 8:23 pm)
பார்வை : 373

மேலே