எதிர்வீட்டு நாய்!.

ஊருறங்கும் நேரத்தில்
தொலைபேசினாய்-அன்று
யாருமற்ற என்மனதை
விலைபேசினாய்
காதலெனும் மீன்பிடிக்க
வலைவீசினாய்-என்னை
காதலித்து காதலித்து
கவிபூசினாய்-பின்னர்
எச்சிலையே போவென்று
எனைவீசினாய்
எச்சமிட்டு எச்சரித்து
எனக்கேசினாய் -உனக்கு
அப்பொழுது நான்தெரிந்தேன்
உலகழகனாய்
இப்பொழுது நானுனக்கு....
எதிர்வீட்டு நாய்!.

எழுதியவர் : கவிஞர் அஸ்மின் (18-Feb-11, 11:48 am)
சேர்த்தது : கவிஞர் அஸ்மின்
பார்வை : 401

மேலே