நிலாக்காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
இரவில் காய்கின்ற
ஒற்றை நிலவு
தனக்குத் துணை
கேட்பதில்லை ..
இரண்டு நிலாக்கள்
சேர்ந்து கிடைத்ததில்லை
நிலாவின் பெருமை ..
துணை வரும் யாவரும்
தூயவருமில்லை ..
உனக்கு நீ
மட்டுமே துணையாவாய் !
இங்கு உன் நிழல்
கூட நிஜமில்லை ..
நீ மட்டுமே நிஜம் !இதை
நீ அறிந்து நடந்தால்
அகிலம் உன் வசமே !!