+++===நான் ஆணையிட்டால்+++===

இது
எனது தாய்மண்...

இங்கு
நான்தான் அரசன்...

எனது
கட்டளையின் பிரகடனத்தை - நீ
கட்டாயம் நிறைவேற்று..!

காடுகளை அழித்தீர் - உயிர்
காற்றினை ஒழித்தீர்...

மழையை பொசுக்கி
மண்ணை நெருப்பாக்கினீர்...

தாயைக் கொன்று
கூறுபோட்டு
விற்பனைக்கு வைத்துவிட்டீர்...

கூறுபோட்ட நிலத்தினிலே
தவறாமல் வீதி வைத்தீர்...

''வாழவேண்டுமெனில்......!''

இனி
மரங்களுக்கும் வீதி வேண்டும்
மறக்காமல் ஒதுக்கிவிடு...

''இது என் கட்டளை'',- உடனே
நிறைவேற்று....

இல்லையேல்...

மர(நில)த்தில் விழும்
ஒவ்வொரு வெட்டும்
உன் கழுத்தில் விழும்...!!!


---------------- நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (13-Apr-14, 1:13 pm)
பார்வை : 90

மேலே